ஏரல், மே. 4: ஏரல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் ர்தலில் 17 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த மனுதாரர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். ஏரல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு கடந்த மாதம் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் 33 பேர் மனுதாக்கல் செய்தனர். மனுபரிசீலனை கடந்த 2ம் தேதி நடந்தது. இதில் சிறுத்தொண்டநல்லூர் தசரதபாண்டியன், ஏரல் சிவக்குமார், தினகரன், ரமேஷ், அசோக்குமார், பிரபாகரன், மணிவண்ணன் உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த தள்ளுபடியான வேட்புமனுதாரர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்றனர். ஆனால், அங்கு முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இதில் ஏரல் அதிமுக நகரச் செயலாளர் ஆத்திப்பழம், தொழிலதிபர் அழகுராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐ சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக