வியாழன், 21 நவம்பர், 2013

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூ. குழு கூட்டம்

ஏரல், : ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூ. குழு கூட்டம் ஏரலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஒன் றிய செயலாளர் வாழைச்செல்வம் முன்னிலை வகித்தார். 
இக்கூட்டத்தில் 2014ம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் சேர்த்தல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு மருதூர் கீழக்காலில் இருந்து 4வது பைப் குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட் டத்தை நிறுத்த வேண்டுவது, தாமிரபரணி ஆற்றில் முக்காணியில் புதிய அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய குழு பொறுப்பாளர் பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் கோபால் மற்றும் செல்லத்துரை, தங்கராஜ், நயினார், அனந்தப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காலநீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கு வெள்ளை நிற ரேஷன்கார்டும், இருப்பிட முகவரி ஆதாரத்துக்காக தட்கல் முறையில் மஞ்சள் நிற ரேஷன்கார்டும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டார்கள் என்பதால், தங்கள் கார்டுகளை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு வருவது இல்லை. இந்த நிலையில் அவர்களது ரேஷன்கார்டுகளை காலநீட்டிப்பு செய்து வழங்குமாறு கோரிக்கைகள் வந்தன.
இதன் அடிப்படையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ரேஷன்கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன்கார்டுகளை இணையதளம் மூலமாக 2013, 2014–ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அதன்பிறகு காலநீட்டிப்பு பதிவு சீட்டு கம்ப்யூட்டரில் அச்சடித்து அளிக்கப்படும்.
சிறப்பு கூட்டம்
இதனை தங்கள் ரேஷன்கார்டுகளில் ஒட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய கால நீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள “என்“ ரேஷன்கார்டுகள், புழக்கத்தில் உள்ள ரேஷன்கார்டாக கருதப்படும்.
இணைதளம் வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டுதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் “என்“ கார்டு புதுப்பிக்கும் சிறப்பு குறைதீர்வு கூட்டம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வருகிற 2–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து ரேஷன்கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதிகள் 31–01–2014 வரை செயல்பாட்டில் இருக்கும். இதனை ரேஷன்கார்டுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்

காங். உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

ஏரல், : ஏரல் பகுதிகளில் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது. ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து கோட்டைக்காடு கிராமத்திற்கான காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டையினை ஜெயபாலிடம் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி ஏரல் பகுதி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அய்யம்பெருமாள், சார்லின், பிஸ்மி, சுல்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 20 நவம்பர், 2013

மழையால் ஏரல்-குரங்கணி ரோடு சேதம்

ஆழ்வார்திருநகரி: ரலில் இருந்து குரங்கணி வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் சாலை மழையால் அரிக்கப்பட்டு அச்சப்படும் வகையில் உள்ளது.ஏரலில் இருந்து குரங்கணி, வழியாக திருநெல்வேலி மற்றும் நாசரேத் செல்லும் சாலை அதிகமாக போக்குவரத்து மிகுந்தது. இந்த சாலை ஆற்றங்கரை வழியாக குரங்கணி வரை இருபுறமும் மழையால் அரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தார்ரோடானது மேலே கவசம் போல் உள்ளது. இதன் மேல் வாகனம் சென்றால் இடிந்து விழும் அபாயமாக உள்ளது. இது கார்த்திகை மாதம் என்பதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் இந்த பாதையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த ரோடுகளில் செல்ல முடியாது. அதனால் பொதுமக்கள் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் மேல் குண்டுகற்களை வைத்து எச்சரிக்கை படுத்தி உள்ளனர். இது நெடுஞ்சாலை துறையினரால் சரி செய்யப்படுமா?

ஏரல் - குரும்பூர் ரோடு மீண்டும் சேதம் பொதுமக்கள் அதிருப்தி

ஏரல்: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பின் சீரமைக்கப்பட்ட ஏரல்-குரும்பூர் ரோடு சில வாரங்களிலே மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஏரலில் இருந்து குரும்பூர் வரை செல்லும் ரோடு முக்கியமான ரோடாகும். தினமும் இவ்வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ரோடு குறித்து பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கோடை காலம், வறண்ட வானிலை உள்ள காலத்தையெல்லாம் விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் இந்த ரோட்டின் பணிகள் தொடங்கப்பட்டன. சரியான முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அவசரம் அவசரமாக தரமற்ற முறையில் இந்த ரோடு வேலை நடந்து வந்தது. பணிகள் இன்றும் முடியாத நிலையில் புதிதாக தார் ரோடு போட்ட இடங்களில் சில வாரங்களிலேயே தார்
ரோடு பெயர்ந்துவிட்டது. மேலும்
வேலையும் பாதியிலே நிற்பதால் ஓரங்களில் கற்கள் பெயர்ந்து டூவீலர்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக மோசமான நிலையில் கிடந்த ரோட்டை எவ்வளவு தரமான ரோடாக சீரமைக்க வேண்டும் என்பதை விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் அவசர கோலத்தில் ரோட்டை சீரழித்தது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மழை காலம் தொடங்கிய பின்பு ஏன் இந்த ரோட்டின் வேலையை தொடங்கினர் என்பது தான் கேள்வியாக உள்ளது. இது பொதுமக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை எடுத்து ஏரல்-குரும்பூர் ரோட்டை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...