ஏரல், ஏப். 22:
ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஏரல் தென்பகுதி கிராமங்களை ஏரலுடன் இணைப்பது ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம். முதலில் தாம்போதியாக இருந்த இப்பாலத்தை குழாய்கள் பதித்து தரை மட்ட பாலமாக மாற்றி அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட் டது.
பாலம் அடிக்கடி பழுது பட்டு வந்ததாலும், மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் பாலம் தண்ணீரில் மூழ்குவதாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு நடவடிக்கை எடுத்து ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நபார்டு ஆர்.ஐ.டி. பி.எப். திட்டத்தில் ரூ.16 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டது.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் கடந்த வருடம் ஜூலை மாதம் அடிக்கல் நாட்டி பாலம் கட்டும் வேலையை தொடங்கி வைத்தார்.
புதிய உயர்மட்ட பாலம் ஏற் கனவே இருக்கும் பழைய பாலத்தின் அருகே மேல் பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் 16 இடங்களில் பில்லர்கள் அமைக்கப்பட்டு, தற்போது ஆற் றின் தென்கரை ஓரத்தில் இருந்து தூண்களுக்கு மேல் தரைவழி பாதையில் 5 தூண்கள் வரை அமைக்கபட்டுள்ளது.
மேலும் இதற்கு அடுத்தாற்போல் 2 தூண்கள் நீளத்திற்கு தளம் அமைக்க கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணி நடந்து வரு கிறது. பாலம் வேலைகள் வரும் டிசம்பர் 27ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வீரமணி கூறுகையில், �ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பால வேலைகளை இந்த வருடத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்படும். பாலத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு மேல் தளம் வேலைகள் நடந்து வருகிறது. ஆற்றில் ஓடை தண்ணீர் செல்லக்கூடிய இடத்தில் மட்டும் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது அந்த இடங்களிலும் தூண்கள் அமைப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் பால வேலை முடிக்கப்படும்� என்றார்.