திங்கள், 22 ஏப்ரல், 2013

சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடை


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடையை எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏரல் அருகேயுள்ள சூளவாய்க்காலில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ரேஷன் கடையை திறந்து வைத்த ஜெயதுரை எம்.பி. பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி கடையின் செயல்பாட்டை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் ரஹீம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக செயலர் மெய்யழகன், ஏரல் பேரூராட்சி துணைத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.


ஏரல், ஏப். 22:
ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஏரல் தென்பகுதி கிராமங்களை ஏரலுடன் இணைப்பது ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம். முதலில் தாம்போதியாக இருந்த இப்பாலத்தை குழாய்கள் பதித்து தரை மட்ட பாலமாக மாற்றி அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட் டது.
பாலம் அடிக்கடி பழுது பட்டு வந்ததாலும், மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் பாலம் தண்ணீரில் மூழ்குவதாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு நடவடிக்கை எடுத்து ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நபார்டு ஆர்.ஐ.டி. பி.எப். திட்டத்தில் ரூ.16 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டது.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் கடந்த வருடம் ஜூலை மாதம் அடிக்கல் நாட்டி பாலம் கட்டும் வேலையை தொடங்கி வைத்தார்.
புதிய உயர்மட்ட பாலம் ஏற் கனவே இருக்கும் பழைய பாலத்தின் அருகே மேல் பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் 16 இடங்களில் பில்லர்கள் அமைக்கப்பட்டு, தற்போது ஆற் றின் தென்கரை ஓரத்தில் இருந்து தூண்களுக்கு மேல் தரைவழி பாதையில் 5 தூண்கள் வரை அமைக்கபட்டுள்ளது.
மேலும் இதற்கு அடுத்தாற்போல் 2 தூண்கள் நீளத்திற்கு தளம் அமைக்க கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணி நடந்து வரு கிறது. பாலம் வேலைகள் வரும் டிசம்பர் 27ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வீரமணி கூறுகையில், �ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பால வேலைகளை இந்த வருடத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்படும். பாலத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு மேல் தளம் வேலைகள் நடந்து வருகிறது. ஆற்றில் ஓடை தண்ணீர் செல்லக்கூடிய இடத்தில் மட்டும் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது அந்த இடங்களிலும் தூண்கள் அமைப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் பால வேலை முடிக்கப்படும்� என்றார்.







வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் தாமிரபரணியில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு சாக்கடையாக மாறும் குடிநீர்

ஏரல், : ஏரல் பகுதிகளில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தாமிரபரணி நதியில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது. இவற்றை அகற்றி தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் வறட்சி நிலவுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன. குடிநீருக்கு ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றையே நம்பியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் இருந்து பழைய காயலில் ஆறு கடலில் கலக்கும் வரை உள்ள ஆற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கும் வாழவல்லான் உள்பட பகுதிகளில் இருந்து குடிநீர் வாரியம் மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. 
இந்த உறை கிணறுகளை சுற்றி சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.  இந்த உடை மரத்தின் வேர்கள் உறை கிணறுகளை துளையிட்டு தண்ணீரை மாசுபடுத்துகிறது. 
மேலும், இப்பகுதிகளில் அமலை செடிகளும் அதிகளவில் வளர்ந்து ஆறு முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் ஓடுவதற்கு வழியின்றி, ஆங்காங்கே தேங்கி, சாக்கடையாக மாறி வருகிறது. இந்த தண்ணீர், உறைகிணறுகளில் புகுந்து குடிநீரும் மாசுபடுகிறது.
குறிப்பாக, ஏரல் தாமிரபரணி ஆற்றுக்கு கீழ்புறம் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் ஆக்கிரமித்து நதியை மூடியுள்ளன. இப்பகுதியில் குளிக்கக்கூட முடிவதில்லை. ஒரு சிலர் அமலை செடிகளை அப்புறப்படுத்திவிட்டு குளித்தாலும் அவர்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படுகிறது. 
மேலும் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துக்களும் இதற்குள் குடிபுகுந்துள்ளன. தண்ணீரும் சாக்கடை கலரில் கருப்பாக மாறி ஒருவித தூர்நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீரும் வற்றத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செய லாளர் ரவிசங்கர் கூறுகை யில், ‘ஏரல் தாமிரபரணி ஆறு அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் சாக்கடை தண்ணீராக மாறி வருகிறது. மக்களுக்கு நோய்கள் பரவும் முன் இந்த அமலை செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஆதிச்சநல்லூர்




உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

http://archaeologyindia.com/adichanallur.asp

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...