வியாழன், 27 செப்டம்பர், 2012

பேட்மாநகரத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம், செப். 25: மழை வேண்டி பேட்மாநகரத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
 முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து பொதுமக்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம், அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சித் தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு விற்பதை தடுத்து நிறுத்த கோரி ஏரலில் சாலை மறியல்


ஏரல்: ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் இருந்து நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஏரலில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஏரல், உமரிக்காடு, வாழவல்லான், சிறுத்தொண்டநல்லூர் பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்து விட்டது. வீடுகளில் உள்ள போர்களில் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்காக பொதுமக்கள் தெரு தெருவாய் அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரல், வாழவல்லான், உமரிக்காடு, பெருங்குளம், மங்களக்குறிச்சி இரட்டை திருப்பதி ஆகிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி விவசாயம் மற்றும் அன்றாட தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவது பொதுமக்கள் இடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பிலும் அரசுக்கு புகார் மனு அனுப்பியும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தியும் இதுவரை தண்ணீர் கொண்டு செல்லப்படுவது முற்றிலும் தடை செய்யப்படவில்லை. இதனால் சாலைமறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதன்படி தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஏரல் காந்திசிலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தாமிபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜோசப் கென்னடி, தூத்துக்குடி மாவட்ட மனித உரிமைகள் கழக தலைவர் கார்த்திகேயன் வழக்கறிஞர்கள் திலகவதி, விஜி, ஏரல் வியாபாரிகள் சங்க பொ ருளாளர் வில்சன். வெள்ளையா, செயலாளர் மந்திரபிரகாஷ், ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, தூத்துக்குடி மேற்கு மாவட்ட மனித உரிமைகள் கழகத் தலைவர் அமர்சிங், பொருளாளர் சாதிக்குல் அமீன், தூத்துக்குடி மேற்கு மாவட்ட காங்.,பொதுச் செயலாளர் ராஜவேல், வாழவல்லான் கணேசன், குறிச்சி கணேசன், பாமக.நெப்போலியன், சுற்றுவட்டார விவசாயிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸ்சார் கைது செய்தனர். அரசு உடன் நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை முற்றிலும் தடைசெய்யா விட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மனித உரிமைகள் கழக சமூக ஆர்வலர் ஏரல் ஜெயபாலன் தெரிவித்தார்.

ஏரலில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஏரல்: இஸ்லாமியர்கள் இறைதூதர் முகமது நபியை இழிவாக சித்தரித்ததை கண்டித்து ஏரலில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் முகமது நபியை இழிவாக சித்தரித்து குரும்படம் எடுத்தவரை தண்டிக்க கோரி ஏரலில் கருப்புக் கொடியேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரல் வடக்கு பள்ளி ஜமாத் தலைவர் சகாபுதீன் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன், ஏரல் புதுமனை பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக.,மாநில பேச்சாளர் காசிம் பிர்தவ்சி, மாவட்ட தலைவர் ஆசாத், ஏரல் பாக்கர்அலி ஆகியோர் பேசினர். ஏரல் சுற்றுவட்டார முஸ்லிம்கள் பெண்கள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இத்திரைபடத்தை எடுத்தவர்களை தூக்கிலிட வேண்டும், இணையதளத்திலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும், இந்திய அரசு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

HW¦¥ ŒX†Rz Ÿ E½tNT|YÛR Lz†‰ NÖÛXU½V¥ 75 ÚTŸ ÛL‰


HW¦¥
ŒX†Rz Ÿ E½tNT|YÛR Lz†‰ NÖÛXU½V¥
75 ÚTŸ ÛL‰


HW¥, ÙN.28-

HW¥ Th‡›¥ ŒX†Rz Ÿ E½tNT|YÛR Lz†‰ NÖÛX U½V¥ ÙNšR 75 ÚTŸ ÛL‰ ÙNšVTyP]Ÿ.

ÚLÖ¡eÛLL·

HW¥ Th‡›¥ ŒX†Rz Ÿ E½tNT|YÛR Lz†‰•, L]WL YÖL]jL· ÚWÖ|LÛ[ ÚNRT|†‰YRÖ¥ «T†‰eL· H¼T|f\‰. G]ÚY ŒX†Rz Ÿ E½tNT|YÛR Œ¿†R ÚY|• GÁ¿ ÚLÖ¡eÛLLÛV Y¦¿†‡ HW¥ LÖ‹‡ ˜Á“ ÚS¼¿ І‰ehz UÖYyP S‡Ÿ TÖ‰L֐“ ÚTWÛY AÛUTÖ[Ÿ S›]ÖŸ hXÚNLWÁ RÛXÛU›¥ ÙTÖ‰UeL· NÖÛX U½V¥ ÚTÖWÖyP• SP†‡]Ÿ. І‰ehz ÚU¼h UÖYyP UÂR E¡ÛU LZL ÙNVXÖ[Ÿ Ù^VTÖXÁ, RÛXYŸ AUŸpj, ÙTÖ£[Ö[Ÿ NÖ‡e A—Á, HW¥ ÙT¼Ú\ÖŸ LZL RÛXYŸ TÖeLŸ A¦, TÖyPÖ¸ UeL· Lyp UÖYyP ÙNVXÖ[Ÿ ÙSÚTÖ¦VÁ, RÖ–WTW‚ TÖ‰L֐“ CVeL RÛXYŸ Ú^ÖN ÙLÁ]z, ÙNVXÖ[Ÿ IÚLÖ, Yeg¥L· ‡XLY‡, «È, HW¥ AÛ]†‰ «VÖTÖ¡L· NjL ÙTÖ£[Ö[Ÿ «¥NÁ z.ÙY·Û[VÖ, ÙNVXÖ[Ÿ U‹‡W‘WLÖÐ U¼¿• TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.

ÛL‰

N•TY• T¼½ RLY¥ A½‹R‰• HW¥ Y£YÖš BšYÖ[Ÿ A‰¥NU‰, CÁÍÙTePŸ WÖUWÖ^Á, N- CÁÍÙTePŸ A£·NÖ•WÖÇ BfÚVÖŸ ÚTorYÖÖ†ÛR SP†‡]Ÿ. CÛRV|†‰ 46 ÙTL· E·TP 75 ÚTŸ ÛL‰ ÙNšVTy| UÖÛX›¥ «|RÛX ÙNšVTyP]Ÿ.


செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தண்ணீர் லாரிகளால் ஏரலில் போக்குவரத்து நெருக்கடி

ஏரல்,: தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளால் ஏரலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
ஏரல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதாலும் ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆனதாலும் ஏரல் மற்றும்  சுற்று வட்டாரப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல காட்சி அளிக்கின்றன.
ஏரல் அருகே மங்கலகுறிச்சி, பெருங்குளம், ராஜபதி, காரச்சேரி உள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைத்து நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் ஏரல் வழியாக தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கும் ஏரலில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். 
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளால் ஏரலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் லாரிகள் எப்போது  நகர்பகுதிகளிலும் வேகமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. 
இதனால் ஏரல் காந்திசிலை பஸ்நிறுத்தம், பெட்ரோல் பங்க் வளைவுபாதை, பஸ்நிலையம் அருகே என பல்வேறு இடங்களில் பெரிய அளவு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல் வழியாக அதிவேகமாக செல்லும் தண்ணீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் கொள்ளை போவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என ஏரல் பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஏரல்,: நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஏரல் வடக்குப்பள்ளி ஜமாத்தலைவர் சஹாப்தின் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்நூல் அசின், புதுமனை ஜமாத் தலைவர் அப்தூல்சலாம், ஏரல் பெரிய பள்ளி நிர்வாகி பாக்கர் அலி முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில பேச்சாளர் பிர்தொசி, மாவட்ட தலைவர் ஆசாத் ஆகியோர் பேசினர். ஏரல் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவை குண்டம் டி.எஸ்.பி மணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ஆறுமுகனேரி, செப். 12: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
 முகாமை, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.எம். மிஸ்கீன் ஸôஹிப் ஃபாஸீ தொடக்கிவைத்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி இளநிலை உதவியாளர் ஃபக்ருத்தீன் அலீ அஹ்மத், அதன் தன்னார்வ சேவையாளர்கள் அபூ நாஸர், நெய்னா முஹம்மத் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
 மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கே. சந்தோஷ்குமார், உதவியாளர் காதர்ஷா, கே.எம்.டி. மருத்துவமனை பொது மருத்துவர் ராணி டப்ஸ், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர்களான சங்கரசுப்பு, ஜெய்சங்கர், சோமசுந்தரம், ஆனந்தராஜ், செவிலியர் எஸ். கோமதி, கே. அழகு மீனாட்சி, ஏ. கஸ்தூரி பாய் ஆகியோரடங்கிய மருத்துவக் குழுவினர், ஹஜ் பயணிகள் 100 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.
 ஏற்பாடுகளை, கே.எம்.டி. மருத்துவமனைச் செயலர் எம்.எம். முஃதஸிம், மேலாளர் அப்துல் லத்தீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் கே.எஸ். முஹம்மத் நாஸர், செயலர் ஏ.எல்.எஸ். அபூஸôலிஹ், பொருளாளர் எம்.ஏ. முஹம்மத் ஹஸன், நிர்வாகிகளான பி.எம்.எஸ். அமானுல்லாஹ், எம்.கே. முஹம்மத் அலீ, அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.இ. அஹ்மத் தம்பி, எம்.எல். ஷேக்னா லெப்பை, எஸ்.ஏ. உமர் ஸôஹிப், எம்.எம்.எஸ். இப்ராஹிம் அத்ஹம் செய்தனர்.

ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா


ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 11ம் தேதி நடந்தது. அன்று காலை தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து மேளவாத்தியங்களுடன் நகர்வீதி வலம் வருதல், மதியம் மகா அபிஷேகம், மஞ்சள் நீராடுதல் மற்றும் மதிய தீபாராதனை, மாலை 3 மணிக்கு அம்மன் கேடயச் சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு சிங்காரி மேளம், செண்டை மேளம் தொடர்ந்து கரகாட்டம் நடந்தது. இரவு புஷ்ப அலங்கார தீபாராதனை, பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து அம்மன் கேடயச் சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதலும் அம்மன் புறப்பாடு நடந்தது. இரவு அம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி வலம் வரும் முக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சென்னை, கோவை, ஏரல் சுற்றுவட்டார மக்கள் மற்றும் பஜார் வியாபாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். அம்மனுக்கு தீப ஆராதனை நடந்தது. இன்று இரவு 9 மணிக்கு சென்னைவாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் திரை இசைத் திருவிழா நடக்கிறது. நாளை வழக்காடு மன்றம் 15ம் தேதி சிந்தனைப்பட்டிமன்றம், 16ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

ஏரல் பள்ளியில் பாராட்டு விழா

ஏரல், :  ஏரல் அரசு மகளிர் பள்ளி 10ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தாணுலிங்கம்பிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர். சேர்மன் அருணாசலசுவாமி கோயில் பரம்பரை அக்த்தார் கருத்தப்பாண்டிய நாடார் வரவேற்றார். 
டி.வி.எஸ் அறக்கட்டளை சார்பில் பொறுப்பாளர் முருகன் பள்ளி தலைமை ஆசிரியர் திருமலைக்கு கேடயம் வழங்கினார். ஏரல் அரிமா சங்க செயலாளர் சண்முகமுருகன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அரிமா சங்க பொருளாளர் அருணாச்சலம், வியாபாரிகள் சங்கம் செயலாளர் தர்மராஜ், ஒய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பொன்னம்பழம், நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராபர்ட்சன், நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பியூலா நன்றி கூறினார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

ஏரலில் துணிகரம் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு

ஏரல், : ஏரல் தெற்கு முகமதியார் தெருவை சேர்ந்த பொன்னுமுத்து மனைவி முத்துக்கனி. கணவர் இறந்து விட்டதால் முத்துக்கனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 
அவருக்கு துணையாக  சென்னையில் வசிக்கும் மகள் தனலட்சுமி அவரது குழந்தை மொனிகாவை ஏரலுக்கு அனுப்பி வைத்தார். மொனிகா அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மொனிகா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது மாடியில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது. அவர் சென்று பார்த்த போது  2 பேர் கையில் பெரிய சாக்கு பைகளுடன் தப்பி சென்றனர். 
மாடியில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை அவர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஏரல் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்.

ஏரல் நூலகத்தில் 60 ஆண்டாக தொடரும் நெருக்கடி

ஏரல், : ஏரலில் 2 ஆயிரம் உறுப்பினர்கள், 28 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் கடந்த 60 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கி வருகிறது. சொந்த கட்டிடத்திற்கு புறம்போக்கு இடத்தை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 3வது பெரிய வணிக நகரம் என்ற பெருமையுடையது ஏரல் தேர்வு நிலை பேரூராட்சி . வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள் நிரம்பி காணப்படும் இந்நகரில் மக்கள் தொகையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்கி கொள்ள நூலகத்தை நாடிச்செல்லும் பழக்கத்தை இப்பகுதியை சேர்ந்த பலர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இங்குள்ள பழமைமிக்க நூலகத்தில் 2 ஆயிரம் உறுப்பினர்கள், 28 ஆயிரம் புத்தகங்கள் இருப்பது வாசகர்களின் வருகைக்கு சான்றாக உள்ளது. ஆரோக்கியமானவர்கள் மட்டுமே இந்த நூலகத்துக்கு செல்ல முடியும் என்பது புதிரான செய்தி. ஏனெனில் மிகவும் குறுகலான இடத்தில் செங்குத்தான படிக்கட்டுகள், மாடியில் இடவசதியற்ற இருட்டறை என கடந்த 60 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதுதான் இதற்கு காரணம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறிச்செல்வது சிரமத்திற்குரிய ஒன்று.
டிஜிட்டல் நூலகம், இ-லைப்ரரி என உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கையில், இன்னமும் புத்தகங்களை அடுக்கி வைக்க இடவசதி, அலமாரிகள் உள்ளிட்ட எவ்வித வசதியும் இங்கில்லை. அரிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் எல்லாமல் சாரை சாரையாக தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேண்டிய நூல்களை தேடிப்பிடிக்க மண்டியிட்டு மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. தவிர உரிய பாதுகாப்பின்றி விலைமதிப்பு மிக்க நூல்கள் கரையான்களுக்கு இரையாகி சின்னாபின்னமாகும் அபாயமும் உள்ளது.
சொந்த கட்டிடத்திற்கு நூலகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் நீண்டகாலமாக அதிகாரிகளின் கோப்புகளில் உறங்கி கொண்டிருக்கின்றன. மேலும் பல மனுக்கள் கொடுத்த மறுகணமே குப்பை தொட்டிகளுக்கு குடித்தனம் சென்றுவிட்டன.
இது குறித்து ஏரல் வாசகர் வட்ட துணைத்தலைவர் முருகேசன் கூறுகை யில், ‘எம்.பி, எம்.எல்.ஏ நிதி ஆதாரம் ஏராளம் இருந்தும் நூலகம் அமைக்க 5 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாசகர்கள் தரப்பில் பல முறை அரசுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. 
போதிய இடவசதியில்லாததால் வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. பழமைமிக்க இந்த நூலகத்தை சொந்த கட்டிடத்திற்கு மாற்றி பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், ஏரல் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இடம் ஒதுக்கி புதிய நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...