T
ஏரல்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கொடி ஏற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் சங்குமுக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையில் கொடி ஏற்றம் நடந்தது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடி ஏற்றத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சப்பர பவனி நடந்தது. 9–ம் திருநாள் வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
8–ந் தேதி, தை அமாவாசைவிழாவின் சிகர நாளான தை அமாவாசை திருவிழா வருகிற 8–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான வருகிற 9–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
12–ம் திருநாளான வருகிற 10–ந் தேதி (புதன்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கொடி ஏற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் சங்குமுக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையில் கொடி ஏற்றம் நடந்தது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடி ஏற்றத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சப்பர பவனி நடந்தது. 9–ம் திருநாள் வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
8–ந் தேதி, தை அமாவாசைவிழாவின் சிகர நாளான தை அமாவாசை திருவிழா வருகிற 8–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான வருகிற 9–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
12–ம் திருநாளான வருகிற 10–ந் தேதி (புதன்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.