ஞாயிறு, 18 நவம்பர், 2012

தூத்துக்குடி மாவட்டம்! Tuticorin District!

தூத்துக்குடி மாவட்டம்!!

தூத்துக்குடி என்றாலே முத்துக் குளிப்பது நினைவுக்கு வந்துவிடும். இங்கு பாரம்பரியமான தொழில் உப்பு தயாரிப்பது. இது ஒரு துறைமுக நகரமாகும். சரக்குப் பேட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் இதுதான். தற்போது ஸ்பிக், ரசாயனத் தொழிற்சாலை மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை, மின் ஆலை போன்றவையும் உள்ளன.

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்க
ான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

--> கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.

-->அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.

-->கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

-->மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

-->ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

-->தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,


பாரதியார் மணி மண்டபம்:

மகாகவி பாரதியின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் இந்த மணி மண்டபம் அமைந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது. அப்போது அதற்கு மகாத்மாகாந்தி வாழ்த்து தெரிவித்தார். 1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.


எட்டையபுரம்:

தூத்துக்குடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர், பாரதி பிறந்ததால் பெருமை பெற்றது. உமறுப் புலவருக்கும் இங்கு தனி நினைவிடம் உள்ளது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த ஊருக்கு, இலச நாடு என்பது பழைய பெயர். 1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என்ற பெயரால் இது அழைக்கப்பட்டு வருகிறது.


கட்டபொம்மன் நினைவுக் கோட்டை:

ஆங்கில ஏகாப்தியத்தை எதிர்த்து முதலில் வாளெடுத்துப் போர்புரிந்த மாவீரன் கட்ட பொம்மன்தான். 1974 ஆம் ஆண்டு இவன் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் இது. கட்டபொம்மன் தனது கோயிலில் தெய்வமாகக் கருதி வழிபட்ட ஜக்கம்மா கோயிலும் இங்கு உள்ளது. பார்வையாளர் நேரம்: காலை 8-1 மாலை 2-6 மணி வரை.


கயத்தாறு:

இவ்வூரில் உள்ள புளிய மரத்தில்தான் 16.10.1799 அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டுக் கொன்றது. இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் வீரத்துடன் இருப்பதற்காக மண்ணை உண்ணத்தரும் பழக்கம் உள்ளது.


குலசேகரப்பட்டினம்:

திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழா புகழ் பெற்றது. இது ஒரு அழகிய கடற்கரை கிராமம்.


கொற்கை துறைமுகம்:

தற்போது இது ஒரு சாதாரண கடற்கறை கிராமம்தான். ஆனால், 12 ஆம் நூற்றாண்டில், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகம் இருந்தது. திருச்செந்தூரிலிருந்து 29கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தத் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊரின் வரலாற்றை மேலும் கண்டறிய அகழ்வாராய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.


ஒட்டப்பிடாரம்-வ.உ.சி. இல்லம்:

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்த ஊர்தான் ஒட்டப்பிடாரம். வெள்ளையருக்கு எதிராகச் சொந்தமாக சுதேசிக் கப்பல் வாங்கி ஓட்டிய மாபெரும் தியாகச் செம்மல். 12.12.1961 அன்று இவர் வாழ்ந்த இல்லம் நினைவகமாக தழிழக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நினைவிடத்தில், அவரது திருவுருவச்சிலை, அரிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. முகவரி: 2/119, வ.உ.சி தெரு, ஒட்டப்பிடாரம்.


மணப்பாடு:

இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இந்தத் தேவாலயத்தில் உள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் இதைச் சின்ன ஜெருசலேம் என்றும் அழைப்பதுண்டு. திருச்செந்தூரிலிருந்து 18 கி.மீ.தூரத்தில் வங்கக் கடற்கறை ஓரம் இது உள்ளது.


ஸ்ரீவைகுண்டம்:

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்குதான் கண்ணபிரான் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டுள்ள வைணவத் திருத்தலம். இக்கோயிலின் மாபெரும் கோபுரமும் பெயர் பெற்றது. திருவேங்கடம் என்பவரால் கட்டப்பட்ட மண்டபத்தில், யாளிகள், யானைகள், வீரர்கள் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.


திருச்செந்தூர்:

திருமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.


திருப்புளியங்குடி:

திவ்யதேசம் என்று அழைக்கப்படும் இந்த ஊர், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2கி.மீ. தொலைவிலும் நகரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி சாலையில் மூன்று திருப்பதிகள் உள்ளன. இவற்றில் காசினை வேண்டா பெருமாள் குடி கொண்டுள்ளார்.


திருக்கோலூர்:

ஆழ்வார்த்திருநகர் மற்றும் தென் திருப்பேரைக்கு இடையில் திருக்கோலூர் உள்ளது. இங்கு செல்ல பரல்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.


வாஞ்சி மணியாச்சி:

ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ்துரையை, வாஞ்சி நாதன் இந்த இரயில் நிலையத்தில்தான் சுட்டான். அத்தோடு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில்தான், இந்த ஊரை வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.


ஆதிச்சநல்லூர்:

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர் தற்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது.


அய்யனார் சுனை

திருச்செந்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் அய்யனார் கோயிலும் அருகில் ஊற்று ஒன்றும் உள்ளன. இதனை அய்யன் சுனை என்று அழைக்கிறார்கள்.

புதன், 14 நவம்பர், 2012

ஏரல் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி அறவே இல்லை



ஏரல் பஸ்நிலையத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஏரல் பஸ் நிலையத்தில்
அடிப்படை வசதி அறவே இல்லை
ஏரல், நவ. 15:
ஏரல் பஸ் நிலையம் அடிப்படை வசதிகள் அறவே இன்றி, நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
து�த்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்குவது ஏரல் பேரூராட்சி. வியாபாரம், தொழில் நிமித்தம் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏரல் வந்து செல்கின்றனர். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி, ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் என எண்ணற்ற புகழ்பெற்ற ஆன்மீக தலங்களும் பக்தர்களின் வருகையை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
அருகில் வனதிருப்பதி, நவதிருப்பதி கோயில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் போன்றவற்றிற்கு மாதம் தோறும் நூற்றுக்கணக்கில் விழாக்கால சிறப்பு பஸ்கள் ஏரல் வழியாக இயக்கப்படுகின்றன.
ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400க்கும் மேற்பட்ட தடவை வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லாத இடமாக பஸ் நிலையம் உள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வணிக நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது. மழை, வெயில் எதுவானாலும் பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்கூரை கூட முழுமையாக இல்லை. அற்பசொற்பமாக பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கடைகளாக மாறிவிட்டன. பஸ்கள் நிற்கிறதோ இல்லையோ வாடகை கார்கள் அணிவகுத்து நிற்பதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மெயின்ரோட்டை விட பஸ்நிலைய உட்புறம் பள்ளமாக இருப்பதால் சிறுமழை வந்தால் கூட தெப்பக்குளமாக மாறிவிடுகிறது. பஸ் நிலைய சிமெண்ட் சாலைகள் எல்லாமல் பெயர்ந்து பாதாள குழிகளாக மாறி விட்டன. சாலையில் பெயர்ந்த கான்கிரீட் கம்பிகள் பயணிகளின் கால்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. குடிநீர் வசதி, இலவச கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் என அவசர தேவை எதுவுமே இங்கு கிடையாது.
இதனாலோ என்னவோ பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக்கட்டணமே வசூலிப்பதில்லை. அப்படி வசூலித்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகம் மவுனம் காப்பது புரியாத புதிராக உள்ளது. வருமானத்திற்கு வழிசெய்தால் பஸ் நிலைய பராமரிப்புக்கும், மேம்பாட்டுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார்கள் பறந்தும் நடவடிக்கை என்பது கானல் நீராகவே உள்ளது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, �ஏரல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மகாத்மாகாந்தி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லை என விளம்பர போர்டுகள் வைத்துள்ளோம்.
மீறி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பஸ் நிலையத்தை நவீனப்படுத்தவும், இங்குள்ள வணிகவளாகத்தை புதுப்பித்து கட்டவும், பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் விரைவில் ஏற்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறோம்� என்றார்.
வணிக நகரம் வளர்ச்சியை இழக்கிறது




வியாழன், 8 நவம்பர், 2012

ஏரல் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

ஏரலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் உள்ள மகாத்மா காந்தி பஸ் நிலையத்தை சுற்றுவட்டாரத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 நாள்தோறும் சென்னை, மதுரை உள்பட 40-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், ஏரல் சேர்மன் சுவாமி கோவில், குரங்கணி கோவில்,ஆறுமுகமங்கலம் கோவில், வனத்திருப்பதி, நவதிருப்பதி கோவில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் சிறப்பு பஸ்களும் இங்கு வந்து செல்கின்றன. இது தொடர்பாக ஏரல் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
 ஏரல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மழைக் காலங்களில் சாக்கடை நீரும் புகுந்து, தண்ணீர் தேங்குகிறது.
 மேலும், பஸ் நிலைய வளாகத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட தனியார் வாடகைக் கார்கள் பஸ்களுக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. 
 மேலும், பேரூராட்சி சார்பில் பஸ் நுழைவுக் கட்டணம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாததால், ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் வீதம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
 எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் நிலையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து ஏரல் பேரூராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஏரல் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட மகாத்மா காந்தி பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பஸ் நிலைய வளாகத்துக்குள் வாடகைக் கார்களை நிறுத்தக் கூடாது என டிஜிட்டல் போர்டு மூலம் தெரியப்படுத்தவும் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 மேலும், பஸ் நிலையத்துக்குள் நவீன சுகாதார வளாகம் அமைத்து, வணிக வளாகத்தைப் புதுப்பித்துக் கட்டவும் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

கம்ப்யூட்டர் போட்டி: பேட்மாநகரம் மாணவிகள் சிறப்பிடம்

எம்.எம். கம்ப்யூட்டர் அகாதெமி, ரெனால்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கேட்ஸ் கம்ப்யூட்டர் போட்டியில் பேட்மாநகரம் எம்.கே. உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
 6, 7-ம் வகுப்பு பிரிவில் மகாலட்சுமி, பாத்திமா சாரா ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். 8, 9-ம் வகுப்பு பிரிவில் எம்.கே. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜிஹைனா ரஷ்மின், அப்ரோஸ் பாத்திமா, சண்முகசுந்தர ராஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
 பரிசளிப்பு விழாவில் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரி பேராசிரியர் நிஸôர் வரவேற்றார். தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலப் பள்ளி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். 
 எம்.கே. உயர்நிலைப் பள்ளிச் செயலர் சாகுல்ஹமீது, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், எம்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், சண்முகம், முத்துசிவம், ரெனால்ட்ஸ் நிறுவன உதவிப் பொது மேலாளர் பிரதாப் உள்ளிட்டோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் விஜய் நன்றி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, : தூத்துக் குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதிகளை பதிவு செய்துள்ளவர்கள், தங்களது தகுதி யினை வளர்த்துக்கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த திட்டத் தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். 
ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 
பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண் டும். பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண் டும். எஸ்.சி, எஸ்.டி இனத்தை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண் டும். 
மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற எழுதப் படிக்கத்தெரிந்திருந் தால் மட்டும் போதுமானது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடி வுற்று இருந்தால் போது மானது. 
பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண் டும். எஸ்.சி, எஸ்.டி. இனத் தை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் அலு வலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி யில் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக் கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி, நெல்லை ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

தூத்துக்குடி, நெல்லை ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை நிதியில்லை என ரயில்வே நிர்வாகம் கைவிரிப்பு

பதிவு செய்த நேரம்:2012-11-02 10:54:12
தூத்துக்குடி,: தென்னக ரயில்வேயை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோடிக்கணக்கில் வருமானத்தை கொட்டி தருகின்றன. ஆனால் சாதாரண ரயில்கள் கடந்த சில ஆண்டுகளாக  நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தென்னக ரயில்வேக்கு வருவாயை அள்ளி தரும் அட்சய பாத்திரமாகவே கருதப்படுகின்றன. உயர்வகுப்பு மற்றும் தூங்கும் வசதியுடன் கூடிய இரண் டாம் வகுப்புகளால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வருமானம் ரயில்வேக்கு கிடைக்கிறது. இதுபோக தட்கல் டிக்கெட்டுகள் மூலம் ரயில்வே இருமடங்கு லாபம் ஈட்டுகிறது. ஆனால் இவற்றுக்கு மாறாக சாதாரண ரயில்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
காலமாற்றத்திற்கு ஏற்ப பஸ்களில் கூட குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பயணிகள் ரயிலில் 90ம் வருடத்திய கட்டணமே இன்று வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.9 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு இருமடங்கு தொலைவுள்ள பேட்டைக்கு பயணிகள் ரயிலில் செல்ல ரூ.2 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூ.3 கட்டணத்தில் சேரன்மகாதேவிக்கும், ரூ.5 செலுத்தி அம்பைக்கும் செல்லலாம் என்பதால் பயணிகள் ரயிலில் கூட்டம் அலை மோதி வருகிறது.
ஆனால் இக்கட்டணங்களால் ரயில்வே துறைக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை சீர்செய்ய தென்னக ரயில்வேக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது.
நெல்லை ரயில் நிலையத்தில் 4, 5வது பிளாட் பார்ம் களில் எந்த வசதியும் கிடையாது. கூடுதல் ரயில்களை இயக்கவும் வசதிகள் இல்லை. புதிய கட்டிடம் அருகே நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கிய நிலை யிலேயே இருக்கிறது.
தென்மாவட்டங்களில் மின்மய மாக்கும் பணிகளும் அவ்வப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி நிறுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 9 மாதமாக பிளாட்பார்ம் டிக் கெட் இயந்திரத்தை  சீரமைக்க கூட நிதியில்லை என காரணம் காட்டி ரயில் வே நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
திருச்செந்தூர் மார்க்கத்தில் பாளை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் குடி தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சுத்த மாக இல்லை. தூத்துக்குடி ரயில் நிலையத்திலும் பிளாட்பார்ம் டிக்கெட் இயந்திரம் பழுதாகி கிடக்கிறது. அங் குள்ள 3வது பிளாட்பார்ம் காட்சி பொருளாக உள்ளது. இவற்றை சரி செய்ய தென்னக ரயில்வே போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ரயில்வே ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் புதிய ரயில் வே அமைச்சராக பொறுப்பேற்ற பவன்குமார் பன்சால் சேவைகளை மேம்படுத்தி ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
வெறும் கட்டண உயர்வுகளை மட்டும் மேற்கொள்ளாமல் தென் மாவட்ட ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் அடிப்படை வசதி களை அதிகரிக்க முன்வரவேண்டும்.
வினோத கட்டணங்கள்
ரயில்வே துறையின் கட்டண விகிதங்கள் எப்போதுமே வினோதமாக நிர்ணயிக்கப்படும். பயணிகளை வரவேற்க செல்லும் ஒருவருக்கு பிளாட்பார்ம் கட்டணமாக ரூ.5 என நிர்ணயிக்கும் ரயில்வே துறை, ரயில்களில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என நிர்ணயம் செய்திருப்பது வேடிக்கையானது.  ரயில்வேயின் இந்த காமெடி கட்டண விதிப்புகளை பயன்படுத்தி கொள்ளும் சில விபரம் தெரிந்த பயணிகள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக, அந்த சமயத்தில் வரும் பயணிகள் ரயிலுக்கான குறைந்தபட்ச டிக்கெட்டுகளை பெற்று ஸ்டேஷனுக்குள் நுழைந்து விடுகின்றனர்.

தூத்துக்குடியில் விமான நிலைய

விமான நிலையத்திற்கு செல்வதற்கான இணைப்பு சாலைவசதி சரிவர இல்லை. விமான நிலைய வளாகத்தில் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க வருபவர்களுக்கு குடிநீர், கழிவறை , இருக்கை வசதி கள் போன்றவை முறையாக இல்லை. உயிரை பணயம் வைத்து பணிபுரியும் நிலையில் பணியாளர்களின் அறை விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி விட்டது. விமான நிலையம் இருப்பதை அறியும் விதமாக பெரிய அளவில் போர்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை.
தூத்துக்குடி, 
: தமிழகத் தின் தென்பகுதியில் கடலோரம் அமைந்துள்ள தூத்துக்குடி தொழில்வளம் மிகுந்த நகரமாகும். வாகனம், ரயில், கப்பல் மற்றும் விமானம் என நான்கு வகை யான போக்குவரத்து வசதி களையும் இந்நகரம் கொண்டுள்ளது. மின்உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, கடல் சார் தொழில்கள் என தொழில் வளங்களுக்கு பஞ்சமே இல்லை.
தூத்துக்குடியை பொறுத்தவரை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் ரயில் நிலையமும், விரிவாக்கத் துக்கு வாய்ப்பிருந்தும் கிடப் பில் போடப்பட்டுள்ள விமான நிலைய மேம்பாடும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே உள்ளன. இங்கிருந்து ரயில் சேவை போதிய அளவில் இல்லாத நிலை யில்,  சுமார் 15 கி.மீ. தொலை வில் புதுக்கோட்டைக்கு மிக அருகே கடந்த 1992ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையம் அமைக்கப்பட்டது. 
 1992ம் ஆண்டு ஏப்.13ல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறை யாக வாயுதூத் ரக விமானம் இயக்கப்பட்டது. 
இதன் மூலம் வணிகர்கள்,  வெளிநாட்டு தொழில்முகவர்கள், அரசியல்பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். 
ஆனால் 14 மாதங் கள் மட்டுமே இந்த சேவை நடந்தது. அதன்பின்னர் சிலஆண்டுகள் விமானசேவை எதுவுமின்றி தூத்துக்குடி விமான நிலையம் மூடியே கிடந்தது. விமான சேவை யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.இ.பி.சி. நிறுவனம் 1996ம் ஆண்டு பிப்.10ம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. அதுவும் 6 மாதங்களோடு முற்றுப்பெற்று விட்டது. அதனைத்தொடர்ந்து விமான சேவை எதுவுமின்றி சுமார் 10 ஆண்டுகள் பெயரளவிற்கு விமான நிலையம் என்ற அந்தஸ்தை மட்டுமே தக்க வைத்திருந்தது. 
கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடி -சென்னைக்கு விமான சேவையை ஏர்டெக்கான் நிறுவனம் தொடங்கியது. பின்னர் இது கிங்பிஷர் நிறுவனத்துக்கு கைமாறியதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து தினமும் கிங்பிஷர் விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை இடை யே ஒரேயொரு விமான சேவை மட்டுமே நடந்து வந்தது.
இந்நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் காலைநேர விமான சேவையை சென்னை -தூத்துக்குடி இடையே துவங்கியது. இந்த விமான சேவை தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய அளவிலான விமானங்கள், இரவுநேர விமானங்களை இயக்க போதிய வசதிகள் செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்குவதால் விமானசேவை ஒட்டுமொத்தமாக தடைபடுகிறது.
விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவையை துவக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை களை நிறைவேற்றுவதற்கு விமான நிலையத்தின் ஓடு பாதை மற்றும் உள்கட்டமைப்பு வசதி குறைவு உள்ளிட்டவை தடையாகவே உள்ளன.
தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதையின் நீளத்தை 1,340 மீட்டரி லிருந்து 1,585 மீட்டர் நீளமாக அதிகரித்தால் மட்டுமே இங்கு நடுத்தர ரக விமானங் களை கையாள முடியும். இரவுநேர விமானசேவை யை துவங்கவேண்டும் எனில் ஓடுபாதையில் விளக்குகள், விமானங்களுக்கான காலநிலையை கணிக்கும் நவீன தொழில்நுட்ப கருவி கள் அமைத்தல், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துல் போன்ற வசதி களை மேற்கொண்டால் மட்டுமே முடியும்.
இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை இந்திய விமான நிலையங் கள் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 586 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை எந்த பூர்வாங்க பணி களும் நடைபெறவில்லை. தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம் என பொதுமக்கள், தொழிலதிபர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏரலில் விழிப்புணர்வு முகாம்

ஏரல், :  ஏரலில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை திருமலை வரவேற்றார். குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா பேசினர். அம்மன்புரம் அக்னிக்குஞ்சுகள் கலைக்குழுவினர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி களை நடத்தினர். உதவி தலைமை ஆசிரியை பியூலாசாந்தினி, பலர் கலந்து கொண்டனர். குழந்தை தொழி லாளர் திட்ட கள அலுவலர் செல்வம் நன்றி கூறினார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...