
உடன்குடி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் பனை மரங்கள் கருகி வருகின்றன. பனை தொழில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பனை மரத் தொழில் பிரசித்திபெற்றது. பனைமரத்திலிருந்து தயாராகும் பதனீரை காய்ச்சி பக்குவப்படுத்தி தயாராகும் ‘உடன்குடி கருப்பு கட்டிக்கு’ பெரும் வரவேற்பு உண்டு. மற்ற பகுதிகளில் தயாராகும் கருப்பு கட்டியை விட, இங்கு உற்பத்தியாகும் கருப்பு கட்டிக்கு மக்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. உடன்குடி கருப்பு கட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது தவிர பனைமரம் மூலம் பதனீர், பனங் கற்கண்டு, பனை கிழங்கு, பனை பழம், நுங்கு, கட்டில் பின்னும் நார், பனை ஓலைகளை பக்குவப்படுத்தி செய்யப்படும் பாய்கள், பெட்டிகள், அலங்கார பொருட்கள், பனம் கட்டைகள், ஓலைகள் என்று பனை மரத்தின் அடிவேர் முதல் தலை ஓலை வரை பல்வேறு வகையில் வருமானத்தை அள்ளி தரும். இந்த பனை மரம் மட்டுமே வறட்சியை தாங்கி நிற்கும். இந்த பனைமரத்தை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடன்குடி பகுதியில் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது. இங்குள்ள குளங்கள், குட்டைகள், ஆறுகள் எல்லாம் வறண்டு விவசாய நிலங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளன. இதனால் விவசாய நிலங்கள் எல்லாம் உவர்ப்பு நிலங்களாக மாறி வருகின்றன. காய், கனிகள், நெல் விவசாயம் அழிந்து தொடர்ந்து வாழை, தென்னை உட்பட அனைத்து விவசாய உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை தாங்க முடியாமல் அழியும் நிலைக்கு பனை மரங்கள் வந்துவிட்டன. பனை மரத்தின் தலைபகுதி (கொண்டை பாகம்) சரிந்து ஓலைகள் காய்ந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. இதனால் தலைபகுதியில் இருந்து புதியதாக பதனீர் பாளைகள் வருவதில்லை. இதனால் பதனீர் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதனீர் இல்லாததால், கருப்புக்கட்டி, பனங் கற்கண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பனை ஓலைகள் கருகி விட்டதால், பனை தொழில்கள் பாதிக்கப்பட்டு, பனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் அல்லாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பனை மரத் தொழில் பிரசித்திபெற்றது. பனைமரத்திலிருந்து தயாராகும் பதனீரை காய்ச்சி பக்குவப்படுத்தி தயாராகும் ‘உடன்குடி கருப்பு கட்டிக்கு’ பெரும் வரவேற்பு உண்டு. மற்ற பகுதிகளில் தயாராகும் கருப்பு கட்டியை விட, இங்கு உற்பத்தியாகும் கருப்பு கட்டிக்கு மக்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. உடன்குடி கருப்பு கட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது தவிர பனைமரம் மூலம் பதனீர், பனங் கற்கண்டு, பனை கிழங்கு, பனை பழம், நுங்கு, கட்டில் பின்னும் நார், பனை ஓலைகளை பக்குவப்படுத்தி செய்யப்படும் பாய்கள், பெட்டிகள், அலங்கார பொருட்கள், பனம் கட்டைகள், ஓலைகள் என்று பனை மரத்தின் அடிவேர் முதல் தலை ஓலை வரை பல்வேறு வகையில் வருமானத்தை அள்ளி தரும். இந்த பனை மரம் மட்டுமே வறட்சியை தாங்கி நிற்கும். இந்த பனைமரத்தை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடன்குடி பகுதியில் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது. இங்குள்ள குளங்கள், குட்டைகள், ஆறுகள் எல்லாம் வறண்டு விவசாய நிலங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளன. இதனால் விவசாய நிலங்கள் எல்லாம் உவர்ப்பு நிலங்களாக மாறி வருகின்றன. காய், கனிகள், நெல் விவசாயம் அழிந்து தொடர்ந்து வாழை, தென்னை உட்பட அனைத்து விவசாய உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை தாங்க முடியாமல் அழியும் நிலைக்கு பனை மரங்கள் வந்துவிட்டன. பனை மரத்தின் தலைபகுதி (கொண்டை பாகம்) சரிந்து ஓலைகள் காய்ந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. இதனால் தலைபகுதியில் இருந்து புதியதாக பதனீர் பாளைகள் வருவதில்லை. இதனால் பதனீர் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதனீர் இல்லாததால், கருப்புக்கட்டி, பனங் கற்கண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பனை ஓலைகள் கருகி விட்டதால், பனை தொழில்கள் பாதிக்கப்பட்டு, பனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் அல்லாடி வருகின்றனர்.

















