வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தோழிகளுடன் பேசுவதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

ஏரல், : ஏரல் தொண்டைமான் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மூத்த மகள் சந்தோஷினி(13) அதே ஊரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளி முடிந் ததும் தனது தோழிகளுடன் பேசி விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதை தாய் கனகலட்சுமி கண்டித்தார். மேலும் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். இதில் மனமுடைந்த சந்தோஷினி கடந்த 7ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.  
இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்ஐ முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பண்டாரம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

ஏரல் அருகே அரசு நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

ஏரல், : ஏரல் அருகே அரசு நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுத்தொண்டநல்லூர் விஏஓ சித்தர்பாபு ஆறுமுகமங்கலம் விஏஓவாக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். 
இவர் ஆறுமுகமங்கலம் செல்லும் போது அங்குள்ள குளக்கரை அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள தேக்குமரங்களை 3 பேர் வெட்டி கடத்த முயன் றதை பார்த்து ஏரல் போலீ சில் புகார் செய்தார்.  
இன்ஸ்பெக்டர் ராம ராஜன், எஸ்ஐ முத்துலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று தேக்கு மரம் கடத் திய ஆறுமுகமங்கலத் தை சேர்ந்த முருகன் (46), சுப்பிரமணியன் (41), பட்டாண்டிவிளை நடராஜன் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரூ 3 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங் களையும் கைப்பற்றினர்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

சாயர்புரம்

ஏரல், : சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடுக்கன்று விழா நடந்தது. 
பள்ளி ஆட்சிமன்ற குழு தலைவர் குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் ராஜ்மோகன் செல்வின், சாயர்புரம் து£ய மேரி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை சார்லட் ஜோதிமணி மரக்கன்றுகளை நட்டினர். தலைமை ஆசிரியர் ராஜசெல்வன் வரவேற்றார். என்.சி.சி. தலைவர் கால்டுவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள் செய்திருந்தனர்.

குரும்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஏரல், : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மணல் கொள்ளையை தமி ழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வியாபாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். அனைத்து குளங்களையும் மராமத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவாசய சங்கம் சார்பில் குரும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா தலைவர் நடேச ஆதித்தன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெகன் முன்னிலை வகித் தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, ஏஐடியூசி மாவட்ட செய லாளர் கிருஷ்ணராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், ராஜலிங்கம், ராஜகோபால், சுகந்தலை இசக்கிமுத்து, செயலாளர்கள் குமார், முருகன், ராஜேந்திரன், தாசன், நிர்வாகிகள் செம்புலிங்கம், முத்துகிருஷ்ணன், தம்பிரான், ஞானபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தாலுகா விவசாய சங்க செயலாளர் ராஜா தலைமையில் விவசாய சங்கத்தினர் செய்திருந்தனர்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி,  நெல்லை மாவட்டங்களில் கோழிப்பண்ணை அமைக்க அரசு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 
கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில்  கொட்டகைகள் அமைப்பதற்கான செலவில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும் நபார்டு வங்கியின்  கோழி துணிகர முதலீட்டு நிதியில் இருந்தும் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
வருடம் முழுவதும் நாட்டுக் கோழி வளர்க்க  விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2ம் தொகுப்பு கோழி குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீதமும் 3ம் தொகுப்பு கோழிக்குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீதமும் மானியம் வழங்கப்படும். மானியத்துடன் கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகள் அமைக்க நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
விவசாயிகள் தனிநபர் தொழில் முனைவோர், சுயஉதவிக்குழுக்கள் தொழில் தொடங்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருக்க வேண்டும். கோழிப்பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வம் உள்ளவர்களும் பயன்பெறலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் கடிதம் மற்றும் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரலில் நாளை பாசன சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ஏரல், : ஏரல் அருகே ஆழ்துளைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து தாமிரபரணி வடகால், தென்கால் பாசன பாதுகாப்பு போராட்டக்குழு சார்பில் ஏரலில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 
தாமிரபரணி வடகால், தென்கால் பாசன சங்க போராட்டக்குழு கூட்டம் ஏரலில் நடந்தது.  உமரிக்காடு சந்திரசேகரன் தலைமை வகித்தார். பாசன சங்க போராட்டக்குழு தலைவர் கந்தசாமி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். 
இதில், ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோட்டில் வாழவல்லான் மற்றும் உமரிக்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஆழ்துளை கிணறு அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.  இதனால் இப்பகுதி நிலத்தடி தண்ணீர் உப்பாக மாறிவருகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர் செய்துள்ள வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் போராடிவரும் நிலையில் 300க்கு மேற்பட்ட நடை மூலம் 1 டன் 30 ரூபாய். 1 லாரி (18 டன்) ரூ.540க்கு என தண்ணீர் விற்கப்படுகிறது. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நியாயம் கிடைக்காததால் நாளை (10ம் தேதி) மாலை 4 மணிக்கு ஏரல் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விவசாய சங்கத்தை சேர்ந்த வாழவல்லான் சின்னத்துரை, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பெஸ்டி, முக்காணி இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...