ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா


ஏரல், ஜன. 22&
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி தினமும் காலை இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உள் வீதி உலா வந்தார்.
முக்கியநிகழ்ச்சியான தை அமா வாசையான இன்று அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல் வேறு சிறப்பு பூஜைகள், அபி ஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த னர்.இன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு எழுமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலக்காட்சியும், இரவு 10மணிக்கு 1ம் காலம் கற்ப கப் பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது.
23ம் தேதி காலை 5 மணிக்கு 2ம்கால வெள்ளைசாத்தி தரிச னமும், கா¬9மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1.30 மணிக்கு 3ம் கால பச்சைசாத்தி தரிசனமும், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தல் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
24ம் தேதி தை அமாவாசை திருவிழா நிறைவுநாள் விழா நடக்கி றது. அன்று காலை தாமிரபரணி நதியில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு ஆலிலைச் சயனம் மங்கள தரிச னம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண் டிய நாடார் செய்துவருகிறார்.
தை அமாவாசையை முன் னிட்டு பக்தர்கள் இரவில் தங்க வசதியாக கோவிலில் மின்விளக்கு வசதி, சாலை மற்றும் குடி நீர்உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள் ளிட்ட இடங்களில் இருந்து ஏர லுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏரல் இன்ஸ்பெக் டர் ராமராஜன் தலைமை யில் எஸ்.ஐ.பால்ஐசக் மேற்பா£ர்வை யில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.
ஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா
திரளான பக்தர்கள் புனித நீராடி தரிசன

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்

நாள்தோறும் நாம் பயன்படுத்துகிற சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்தை நாம் என்றேனும் எண்ணிப்பார்ப்பதுண்டா.. அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நமக்கேது நேரம் என்கிறீர்களா? 

ஒரு நிமிடம் மட்டும் அதற்கு ஒதுக்குங்களேன்.. ஒரு பெரும் ஆபத்தை தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதற்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும். என்ன தங்கம்பழனி பீடிகை போடுகிறாரே என நினைக்க வேண்டும். 

எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும். 
அது மேலிருக்கும் மூன்று வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம், காலவதியாகும் தேதி போட்டிருக்கும். 

அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C...இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

Gas cylinder
சமையல் எரிவாயு கலன்
மேற்கண்ட படத்தில் B.21 என்று போட்டிருக்கிறது. இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது இரண்டாயிரத்து இருப்பத்தொன்றாவது வருடத்தையும் குறிக்கிறது. 


ஜனவரிபிப்ரவரி,மார்ச்
 முதல் காலாண்டு
 A
ஏப்ரல்,மே,ஜூன்
 இரண்டாம் காலாண்டு
 B
ஜூலைஆகஸ்ட்செப்டம்பர்
 மூன்றாம் காலாண்டு
 C
அக்டோபர்நவம்பர்டிசம்பர்
 நான்காம் காலாண்டு
 D


உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும். 

அதுபோலவே தங்களுடைய சமையல் எரிவாயு கலனில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.. ஒருவேளை  முந்தைய  வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

அதுபோலவே பெற்றுக்கொண்ட கொள்கலனை பாதுகாப்பான முறையில் திறந்து பழகிக்கொள்ள வேண்டும். 

மேல் மூடியை அதில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை நம்மை நோக்கி வருமாறு ஒரு கையில் இழுத்து வைத்துக்கொண்டு, மறு கையில் அம்மூடியை மேலே இழுத்து மூடியை அகற்றலாம். நாம் பாதுகாப்பாக கையாலும் முறைகளாலும் பெரும் ஆபத்தை தவிர்க்கலாம்.! எதுவும் வருமுன் காப்பதே சிறந்ததல்லவா? 

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...