ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஏரலில் பரிதாபம்: பாய்லரில் சிக்கி வாலிபர் சாவு


அம்பை புதுக்குடியை சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 25). இவர் ஏரலில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முருகேசன் மற்றும் ஆலங்குளம் மருதம்புத்தூரை சேர்ந்த ஜீவா (21)ஆகியோர் பாய்லரை நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு வேலை பார்த்து வரும் ஆத்தூரை சேர்ந்த விஜயகோபால், ஜெயபிரகாஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பாய்லருக்கான சுவீட்ச்சை ஆன் செய்தனராம். இதில் முருகேசன், ஜீவா ஆகியோர் பாய்லரில் சிக்கி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விஜயகோபால்,ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுதொண்டநல்லூர்

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை முத்துமாலை அம்மனுக்கு கொடை விழா நடக் கிறது. இந்த ஆண்டு கொடைவிழா வரும் 27ம் தேதி (செவ்வாய்கிழமை) நடக் கிறது. இதை முன்னிட்டு 25ம் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி கொடை விழா நடக்கிறது.
அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணம், மத்தாப்பு வேடிக்கை, சிங்காரி மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை மிமிக்ரி, நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...