வெள்ளி, 4 மே, 2018

ஏரல் அருகே சாயர்புரத்தில் தண்ணீர் பந்தல்



ஏரல்,  மே 4: வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக, சாயர்புரம் நகர திமுக இளைஞர் அணி  சார்பில்  சாயர்புரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றியச் செயலாளர்  ரவி தலைமை வகித்தார். சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், சாயர்புரம் நகர இளைஞர் அணி  அமைப்பாளர்  கண்ணன், துணைச் செயலாளர் கிறிஸ்டோபர்  முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற  தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.இதில் மாணவரணி  மாநில துணைச் செயலாளர் உமரிக்காடு சங்கர், தலைமைச்  செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர்  சிவக்குமார், மகளிர் அணி  அமைப்பாளர் ஜெஸி பொன்ராணி,  மகளிர்  தொண்டர் அணி  அமைப்பாளர் வேலம்மாள், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள்  ராயப்பன், அனஸ், பாலமுருகன், பிரபாகரன், சுபமாரியப்பன், செல்ஸன்,  கார்த்தீசன், தீபன், ராமசுப்பிரமணியன், பழையகாயல் கூட்டுறவு சங்கத் தலைவர்  ஜெயசங்கர், நகரச் செயலாளர்கள் சாயர்புரம் வரதராஜ் ஸ்டாலின், ஏரல்  பார்த்திபன், ஏரல் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், இளைஞர் அணி   ஒன்றிய அமைப்பாளர் ஜான்பாண்டியன், ஊராட்சி  செயலாளர்கள் சாமுவேல், சாதிக்குல் அமீன், குணசேகர், இம்மானுவேல் உள்ளிட்ட   பலர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...