செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஏரல் ஆற்றில் கொலையானவர் கட்டிட தொழிலாளி

ஏரல் ஆற்றில் கொலையானவர் கட்டிட தொழிலாளி
ஏரல், ஜன. 31-
ஏரல் ஆற் றில் கொலை யா ன வர் கட் டிட தொழி லாளி என தெரி ய வந் துள் ளது. கொலை யா ளி கள் யார் என போலீ சார் தீவி ர மாக விசா ரித்து வரு கி றார் கள்.
ஏரல் ஆற் றில் நேற்று காலை வாலி பர் ஒரு வர் கத் திக் குத்து காயங் க ளு டன் இறந்து கிடந் தார். சம் பவ இடத் திற்கு திரு வை குண் டம் டிஎஸ்பி மாத வன், ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற் றும் போலீ சார் வந்து விசா ரணை நடத் தி னர். அப் போது வேடிக்கை பார்க்க வந் த வர் க ளில் சிலர், கொலை யா ன வர் சேதுக் கு வாய்த் தானை சேர்ந்த மீன் வியா பாரி போல் தெரி கி றது என தெரி வித் த னர். இதைத் தொ டர்ந்து அங்கு சென்று விசா ரணை நடத் தி னர். அப் படி ஒரு வர் யாரும் இங்கு இல்லை என பொது மக் கள் தெரி வித் த தால் துப்பு துலங் கும் பணி யில் போலீ சார் தீவி ர மாக ஈடு பட் ட னர்.
இதை யொட்டி இறந் த வர் போட்டோ பிரின்ட் போடப் பட் டது. டிஎஸ்பி மாத வன் தலை மை யில் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆ னந்த், ஆழ் வார் தி ரு ந கரி இன்ஸ் பெக் டர் சிவ லிங் கம், திரு வை குண் டம் இன்ஸ் பெக் டர் வெங் க டே சன், ஏரல் எஸ் ஐக் கள் சண் மு க சுந் த ரம், இமா னு வேல், ஜெய சே க ரன், சிறப்பு எஸ்ஐ சுந் தர் ராஜ், ஏட்டு ரீகன், போலீஸ் கா ரர் தர் மர் ஆகி யோர் கொண்ட தனிப் படை அமைக் கப் பட் டது.
இறந் த வர் அணிந் தி ருந்த சட் டை யில் சாயர் பு ரம் டெய் லர் பெயர் இருந் த தால் அங்கு சென்று புகைப் ப டம் உத வி யு டன் விசா ரணை மேற் கொண் ட னர். சாயர் பு ரம் பஜா ரில் விசா ரித் த போது அவர் சக் கம் மாள் பு ரத் தைச் சேர்ந் த வர் என் றும் மற் றும் சிலர் சேர் வைக் கா ரன் ம டத் தைச் சேர்ந் த வர் என் றும் தெரி வித் த னர். இதைத் தொ டர்ந்து போலீ சார் சம் பந் தப் பட்ட ஊர் க ளுக்கு சென் றார் கள்.
அப் போது இறந் த வர் சக் கம் மாள் பு ரத் தில் வசித்து வந் தது தெரி ய வந் தது. போலீ சார் படத்தை காட் டி ய போது அதே ஊரைச் சேர்ந்த அந் தோ ணி மேரி(33) என் ப வர் படத்தை பார்த்து விட்டு, அது தனது கண வர் தான் என உறுதி செய் தார். இறந் த வர் வய ன பெ ரு மாள் மகன் பால மு ரு கன்(38) என் றும் சொந்த ஊர் சேர் வைக் கா ரன் ம டம் என் றும் பிழைப் புக் காக தற் போது குடும் பத் து டன் சக் கம் மாள் பு ரத் தில் வாடகை வீட் டில் வசித்து வந் த தும் கட் டிட தொழில் செய்து வந் த தும் தெரி ய வந் தது.
கொலை யான பால மு ரு கன் எதற் காக கொலை செய் யப் பட் டார், அவரை ஏர லுக்கு அழைத்து வந் த வர் கள் யார் என விசா ரணை நடக் கி றது. பால மு ரு கன் மனைவி மற் றும் சிலரை பிடித்து போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.
மனைவி உள்பட சிலரிடம் விசாரணை

குரங்கணி பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு



குரங்கணி பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
குரங்கணி, மாவடிப்பண்ணை பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
தென்திருப்பேரை, 

குரங்கணி, மாவடிப்பண்ணை பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

அட்டகாசம் செய்யும் குரங்குகள் 

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி, மாவடிப்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் காணப்படுகின்றன. அவை வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதுடன், உணவுப் பொருட்களையும் தூக்கிச் சென்றுவிடுகின்றன. சிறுவர்கள் உள்பட பலரை குரங்குகள் கடித்து காயப்படுத்தி உள்ளன.

மாந்தோப்பு, தென்னந்தோப்புகளிலும் குரங்குகள் புகுந்து, மாங்காய், இளநீரை பறித்து வீசி அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

20 குரங்குகள் பிடிபட்டன 

எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்தரநாதன், வன காப்பாளர்கள் காளிராஜன், ரத்தினம் உள்ளிட்டவர்கள் குரங்குகளை பிடிப்பதற்காக மாவடிப்பண்ணையில் நேற்று 3 இடங்களில் கூண்டுகளை வைத்து இருந்தனர்.

கூண்டுகளுக்குள் பொரிகடலை போட்டு இருந்தனர். அதனை தின்பதற்காக குரங்குகள் வந்தபோது, கயிற்றின் மூலம் கூண்டின் கதவுகளை மூடி விட்டனர். முதற்கட்டமாக 20 குரங்குகளை பிடித்தனர். அவற்றை களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் குரங்களை பிடித்துச் செல்லும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஏரலில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை



ஏரலில்
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
ஏரலில் வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்து, தாமிரபரணி ஆற்றில் உடலை வீசிச் சென்ற மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல்,

வாலிபர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடு பகுதியில் சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் நேற்று தலைகுப்புற பிணமாக கிடந்தார். அவர் பச்சை நிறத்தில் கருப்பு கோடு போட்ட சட்டையும், லுங்கியும் அணிந்து இருந்தார்.

இதுகுறித்து வாழவல்லான் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வன், ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவ ஆனந்த் (ஏரல்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சிவலிங்கம் (ஆழ்வார்திருநகரி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மதுகுடிக்க வந்தபோது...

ஆற்றில் வாலிபர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மணலில் ரத்தக்கறை படிந்து இருந்தது. கொலை செய்யப்பட்ட அவருடைய உடலை இழுத்துச் சென்று, ஆற்றில் வீசியதற்கான தடமும் பதிந்து இருந்தது. கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஏராளமான காலி மது பாட்டில்கள் கிடந்தன.

நேற்று முன்தினம் இரவில் தாமிரபரணி ஆற்றில் மது குடிக்க வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது மது குடிக்க அழைத்து வந்து நண்பர்களே தீர்த்து கட்டினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தை போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. பின்னர் அது ஏரல் சிவன் கோவில் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரையிலும் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசார் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை கும்பல் எது? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்த னர்.

திரளான பக்தர்கள் தரிசனம்
ஏரல், ஜன. 27-
தை அமா வா சையை முன் னிட்டு ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் இன்று ஏரா ள மான பக் தர் கள் குவிந் த னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் பிர சித்தி பெற்ற ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா இன்று நடந் தது. இதனை முன் னிட்டு பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரி ச னம் மற் றும் அபி ஷே க மும் நடந் தது. மாலை சுவாமி இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோல காட் சி யும், இரவு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சிவப்பு சாத்தி தரி ச ன மும் நடக் கி றது.
தை அமா வா சையை முன் னிட்டு பக் தர் கள் அரசு சிறப்பு பஸ் கள் மற் றும் தனி கார், வேன் க ளில் கோயி லில் வந்து குவிந் த னர். இரவு பக் தர் கள் தாமி ர ப ரணி ஆற் றுப் ப கு தி யில் தங் கு வ தற்கு தற் கா லிக உயர் கோ புர மின் வி ளக் கு கள் அமைக் கப் பட் டுள் ளது.
நாளை (28ம்தேதி) காலை 5 மணிக்கு 2ம்கா லம் வெள்ளை சாத்தி தரி ச னம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், மாலை சுவாமி ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந்து சேரும் ஆனந்த காட் சி யும் நடக் கி றது.
தை அமா வாசை நிறைவு விழா 29ம்தேதி நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், மதி யம் அன் ன தா னம் வழங் கு த லும், மாலை ஊஞ் சல் சேவை நிகழ்ச் சி யும், இரவு ஆலி லைச் சய னம், மங் கள தரி ச ன மும் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
ஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா
தை அமா வாசை நிறைவு விழா 29ம்தேதி நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், மதி யம் அன் ன தா னம் வழங் கு த லும், மாலை ஊஞ் சல் சேவை நிகழ்ச் சி யும், இரவு ஆலி லைச் சய னம், மங் கள தரி ச ன மும் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.




திங்கள், 23 ஜனவரி, 2017

ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார், ஏரல் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றிட உத்தரவிட்டிருந்தார்.
ஏரல், 

இதையடுத்து நெல்லை மண்டல உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் அறிவுரைப்படி ஏரல் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பிரபா, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளை அழைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட கேட்டு கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வபிரசாத், ஏரல் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர், இளநிலை உதவியாளர்கள் பத்திரகாளி, பரமசிவன், சுகாதார மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், அழகு மற்றும் பணியாளர்கள், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு வியாபாரிகளிடம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அகற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து பெரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடை முன் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றினர். மேலும் சில வியாபாரிகள் கடை முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை போலீஸ் வலைவீச்சு



குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில்  உண்டியலை  உடைத்து  கொள்ளை போலீஸ் வலைவீச்சு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்திருப்பேரை, 

முத்துமாலை அம்மன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கொடை விழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதே போல் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்து செல்வார்கள்.

இந்த கோவிலில் 10–க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்களை சுற்றி பாதுகாப்பாக கிரில் கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்களான ராமஜெயம், ஆதிநாராயணன் ஆகியோர் தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜைகள் நடத்துவர். இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்குள் கோவில் நடை சாத்தப்படும். அதேபோல் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிக்கப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது.

உண்டியல் உடைப்பு

நேற்று காலை 6 மணிக்கு அர்ச்சகர் ராமஜெயம் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அங்கு கோவில் மூலஸ்தானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆள் உயர எவர்சில்வர் உண்டியலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. அருகே சென்று பார்த்த போது, மர்ம மனிதர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், மற்ற 2 உண்டியல்களை உடைக்க முயன்றுள்ளதும் தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து கோவில் நிர்வாகிகள், உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்த நேர்த்திக்கடன் பணத்தை எண்ணி, கடந்த டிசம்பர் மாதம் 29–ந்தேதி வங்கியில் செலுத்தி உள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய நேர்த்திக்கடன் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

2 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து போலீசார், கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் 2 மர்ம மனிதர்கள் புகுந்து, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அந்த மர்ம மனிதர்கள் கோவில் கோட்டை சுவர் ஏறி உள்ளே வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கின்றனர். 

கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை 
வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஏரலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏரலில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஏரல் மெயின் பஜா ரில் மேற் கொள் ளப் பட்ட ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே முன் வந்து அகற் றி னர்.
ஏரல், ஜன. 23:
ஏரல் பேரூ ராட்சி பகு தி க ளில் காணப் ப டும் ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே முன் வந்து அகற்றி வரு கின் ற னர்.
ஏரல் பேரூ ராட் சிப் பகு தி க ளில் காணப் ப டும் ஆக் கி ர மிப் பு களை அகற்ற கலெக் டர் ரவிக் கு மார் உத் த ர விட் டி ருந் தார். இதை ய டுத்து நெல்லை மண் டல உதவி இயக் கு நர் மாகின் அபு பக் கர் அறி வு றுத் த லின் படி அனைத்து வியா பா ரி கள் சங்க நிர் வா கி களை அழைத் துப் பேசிய ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா, ஆக் கி ர மிப் பு களை வியா பா ரி களே அகற் றிட முன் வர வேண் டும் என கேட் டுக் கொண் டார்.
இத னி டையே, வை குண் டம் தாசில் தார் செல் வ பி ர சாத், ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா, இள நிலை உத வி யா ளர் கள் பத் தி ர காளி, பர ம சி வன், சுகா தார மேற் பார் வை யா ளர் கள் அடைக் க லம், அழகு மற் றும் பணி யா ளர் கள் ஆக் கி ர மிப்பு பகு தி களை நேர டி யா கப் பார் வை யிட் ட தோடு ஆக் கி ர மிப் பு களை ஒரு சில தினங் க ளில் அகற் றா விட் டால் நேர டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரித் த னர்.
இதை ய டுத்து பெரும் பா லான வியா பா ரி கள் தாங் க ளா கவே முன் வந்து தங் கள் கடை முன்பு மேற் கொள் ளப் பட் டி ருந்த ஆக் கி ர மிப் பு களை அகற் றி னர்.
தொடர்ந்து ஆக் கி ர மிப்பு அகற் றும் பணி நடந்து வரு கி றது.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

சாயர்புரத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  சனிக்கிழமை காலை 9 முதல் இம்முகாம் நடைபெறுகிறது. இதில், வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் போப் கலைக்கல்லூரியில் காலை முகாம் தொடங்கும் முன்பு பெயர் பதிவு செய்து பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94450 34219, 94450 34220,  94450 34221 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் தூத்துக்குடியில் 3-வது நாளாக தொடரும் மாணவ-மாணவிகளின் போராட்டம்

ம்

கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல்
தூத்துக்குடியில் 3-வது நாளாக தொடரும் மாணவ-மாணவிகளின் போராட்டம்
கொட்டும் பனியையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
தூத்துக்குடி, 

கொட்டும் பனியையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

ஜல்லிக்கட்டு


தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தில் இரவு, பகலாக மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் கொட்டும் பனியையும், பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

3-வது நாளாக...

நேற்று 3-வது நாளாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடைபெறும் மைதானத்திற்கு திரண்டு வந்தனர். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் காலை முதல் அணி, அணியாக போராட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு வந்த வண்ணமாக இருந்தனர். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறும் மைதானத்தில் தன்னார்வலர்கள் பந்தல் அமைத்து கொடுத்தனர்.

அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், தமிழர்களை வஞ்சிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

பெண் மயக்கம்

போராட்டத்தில் முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாலதி(வயது 30), பங்கேற்று இருந்தார். அவர் காலை முதல் கோஷங்களை எழுப்பியபடி இருந்தாராம். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாலதி திடீரென போராட்டம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் உடனடியாக உடைமைகளை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு

தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் போராட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அனைத்து போலீசாரும் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் போலீசாரும் சீருடையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

16 இடங்களில்


சாயர்புரத்தில் போப் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி முன்பு நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 16 இடங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்கள் நடந்தன. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் உள்பட 8 இடங்களில் இரவு வரை போராட்டம் நீடித்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில்
தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி, 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி


தூத்துக்குடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் 2-ம் கேட்டு பகுதியிலுள்ள ரெயில் நிலையத்துக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில்,கீதாஜீவன், எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகர் ஆகியோர முன்னிலையில் தி.மு.க.வினர் சென்றனர். காலை 11.45 மணிக்கு சென்னையிலிருந்து வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அந்த ரெயில் முன்பு தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 5 நிமிடத்துக்கு பின் மறியலை கைவிட்டு தி.மு.க.வினர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறி சென்றனர்.

கோவில்பட்டி


கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில்- கோவை பாசஞ்சர் ரெயில் வந்தது. உடனே தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமானவர்கள் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட அவை தலைவர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டு சென்றது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சண்முகபுரம் ரெயில்வே கேட்டில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்துக்கு திரண்டனர். வழக்கமாக காலை 8 மணியளவில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு வரும் சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணியளவில் திருச்செந்தூர் சண்முகபுரம் ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்தது.

அனிதா ராதாகிருஷ்ணன்

உடனே அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் ரெயில் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர். அங்கு ரெயில் நின்றதும், சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், ராஜசேகர், ரவி செல்வகுமார், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

3 ரெயில்கள் ரத்து

தி.மு.க.வினரின் ரெயில் மறியல் போராட்டத்தால், திருச்செந்தூரில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் பாலக்காடு பாசஞ்சர் ரெயில், மாலை 4.35 மணி, மாலை 5.55 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

ஏரல் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது

ஏரல்
ஏரல் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு காளையுடன் பஜார் பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஏரலில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. மருந்து கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரம் வெறிச்சோடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 17 இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 17 இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்துக்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தால் பஜார்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மாணவர்கள் போராட்டம்


தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கடை அடைப்பு

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

லாரி-ஆட்டோ ஓடவில்லை


தூத்துக்குடியில் பெரும்பாலான தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும்பாலான விசைப்படகுகள், நாட்டு படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு பணியாற்றினார்கள். மருத்துவ துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அரசு ஊழியர்கள்


மாவட்டத்தில் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. விடுமுறை வழங்காத கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். அரசு ஊழியர்கள், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து, மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

சினிமா காட்சிகள் ரத்து

மாவட்ட போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் குரூஸ் பர்னாந்த் சிலை முன்பு இருந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானம் வரை ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆதரவாக பேசினார்கள். தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கோவில்பட்டி


கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கடந்த 18-ந்தேதி காலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் இரவில் பனியிலும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும் அங்கேயே தங்கியிருந்து, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நடந்தது.

வணிகர்கள் ஆதரவு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பயணியர் விடுதிக்கு சென்று, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நில தரகர் சங்கத்தினர் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின் ரோடு வழியாக பயணியர் விடுதிக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தர்ணா- சாலைமறியல்


அனைத்து வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி சென்று, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இறக்கி விட்டு சென்றனர்.

கடையடைப்பு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதன்படி கோவில்பட்டியில் தினசரி மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மருந்து கடைகள் தவிர டீக்கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஆட்டோ, வேன், லாரி ஓடவில்லை. பெரும்பாலான அரசு பஸ்களும் பைபாஸ் ரோடு வழியாகவே சென்றதால், நகரம் வெறிச்சோடியது.

கழுகுமலை

கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கரடிகுளத்தில் கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் பஸ் நிலையம் வேன் ஸ்டாண்டு பகுதியில் 2-வது நாளாக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மருந்து கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.

புதூர், சூரங்குடி, குளத்தூர், புளியங்குளம், வேம்பார், தருவைக்குளம், வேடநத்தம் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை.

எட்டயபுரம்


எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறிதுநேரத்தில் அங்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டனர். இதையடுத்து அங்கு சாமியானா பந்தல் அமைத்து போராட்டம் நடந்தது. முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் மாணவர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் காந்தி தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. கோவில் வாசலில் சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோ, வேன், கார் ஓடவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடியது.

ஏரல்-ஆழ்வார்திருநகரி

ஏரல் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு காளையுடன் பஜார் பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஏரலில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. மருந்து கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரம் வெறிச்சோடியது.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காயல்பட்டினம்-ஆறுமுகநேரி

காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காயல்பட்டினம், ஆறுமுகநேரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை.

மெஞ்ஞானபுரம்-சாத்தான்குளம்

மெஞ்ஞானபுரம் பஜாரில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாசரேத் பஸ் நிலையம் அருகில் நகர வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பில் 17 இடங்களில் போராட்டம் நடந்தன. 

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...