வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா பக்தர்கள் தரிசனம்

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாலை அம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இரவில் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது. 25-ந் தேதி இரவில் அம்மனுக்கு மாக்காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது.

விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் மதியம் அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. இரவில் வில்லிசை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது.

சப்பர பவனி

வாணவேடிக்கை நடைபெற்றது. மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, நகரில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று காலையில் திருவீதி உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் சிறப்பு பூஜை, இரவில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்

ஏரலில் விபத்து பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்; கூட்டுறவு பணியாளர் பலி

பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கூட்டுறவு பணியாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
கூட்டுறவு பணியாளர்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேயன்விளை கீழத்தெருவைச் சேர்ந்தவர், அருள் (வயது 40). இவர் ஆறுமுகநேரி ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூரில் நடந்த கோவில் விழாவையொட்டி, அங்குள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டு வந்தார்.
பஸ் மோதி பலிஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக சென்ற போது, நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் அருள் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான அருளுக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அகற்றம்

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அகற்றம்
ஏரல், ஆக. 25:
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் பொது மக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிர மித்துள்ள அமலைச்செடி களை அகற்றினர். மாவட்ட மாணவ ரணி துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில், ஏரல் நகர செயலாளர் மூர்த்தி, துணைச் செய லாளர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அந்தோணி, நகர இளைஞ ரணி அன்னராஜன், பொரு ளாளர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் கூறுகையில், �ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவுக்கு அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் அசுத்தமாகி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அமலைச்செடிகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளை தேமுதிகவினர் அகற்றினர்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏரலில் இஸ்ரேலை கண்டித்து முஸ்லிம் ஜமாத்த�ர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரல், ஆக. 24:
இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத்த�ர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வருடங்களாக தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், மத்திய அரசு இஸ்ரேல் உடனான உறவை மறு பரீசிலனை செய்ய கோரியும் ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஜமாத் சார்பில் ஏரல் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏரல் முஸ்லிம் வணிகர்நல சங்கம் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். நிஜாம்முதீன், இக்பால், முகமது உசேன், சிந்தாகனி முன்னிலை வகித்தனர். சேக் அஷ்ரப் அலி பைஜி துவக்க வைத்தார். பாப்பு லர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பி னர் முகைதீன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் தாக்குதலால் பொதுமக்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை கள், வீடுகள், பள்ளி வாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய செயலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.சூழைவாய்க்கால் முன் னாள் பஞ்சாயத்து தலை வர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலை கண்டித்து

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஏரல் அருகே உள்ள செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் தடைபடும் நீரோட்டம்

ஏரல், ஆக. 20:
ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க் காலை ஆக்கிரமிப்பு செய் துள்ள செடி, கொடிகள் மற்றும் விழுந்து கிடக்கும் மரங்களால் தண்ணீர் செல்வது தடை பட்டு வந்தது. இதனை அப்பகுதி பாசன விவசாயிகள் அகற்றினர்.
ஏரல் அருகே உள்ள கொற்கை குளத்தை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது. இதில் 15 லட்சம் வாழைகளுக்கு மேல் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் தண்ணீர் வந்து ஏரல் அருகே சூளைவாய்க்கால் பாலம் மடை வழியாக வாய்க்கால் மூலம் குளத்திற்கு செல் லும்.
கடுமையான வறட்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தொடர்ந்து 2 மாதங்களாக தண்ணீர் வராத தால் குளம் காய்ந்து வாழைகள் கருக தொடங் கின. இதனால் கொற்கை குளம் பாசனத்தை நம்பியுள்ள உமரிக்காடு, முக் காணி, கொடுங்கனி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தாமிரபரணி பாசன போராட்டக்குழுவை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கருகும் பயிர் களை காப் பாற்ற ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வடகால் வாய்க்காலில் இருந்து நேரடியாக மடை மூலம் தண்ணீர் செல்லும் நிலங்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் கிடைத் தது.
ஆனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை. வாய்க்காலில் தண்ணீர் குறைவாக வந்ததாலும் செடி, கொடிகள் மற்றும் அருகில் உள்ள காய்ந்து போன மரங்கள் தண்ணீரில் விழுந்து தடை ஏற்படுத்தியதாலும் நீரோட்டம் தடைபட் டது. இதனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை.
கொற்கை குளத்தில் 12 பாசன மடைகள் உள்ளன. இதில் 5 மடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து கொற்கை பாசன பகுதியை சேர்ந்த உமரிக் காடு வாழை விவசாய சங்க தலைவர் செந்தூர் பாண்டி, முக்காணி தலைவர் கோட்டை, கொடுங்கனி தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி மூலம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடி மற்றும் தண்ணீரில் விழுந்து கிடந்த மரங்களை நேற்று அகற்றினர். மேலும் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீரில் இறங்கி செடி, கொடிகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகளே அகற்றினர்
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள செடி, கொடிகளை கொற்கை பாசன விவசாயிகள் தண்ணீரில் இறங்கி அகற்றினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு வி

சிறுத்தொண்டநல்லூர்
சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா
ஏரல், ஆக.11:
சிறுத் தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை அம்பாள் தபசு புறப்படுதல், ஏரல் தாமிரபரணி ஆற்றி லிருந்து பால்குடம் எடுத்து நகர் வலம் வருதல், பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங் கார தீபாராதனையும் நடந்தது.
மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கர நாராயண ராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக திரைப் பட மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து இரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.
பின்னர் சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன்சப்பரங்களில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கரேஸ்வரர் கோயில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழாவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

ஏரல் தாமிரபரணி ஆற்றின் தாம்போதி பாலத்தில் மெகா பள்ளம்

ஏரல் தாமிரபரணி ஆற்றின்
தாம்போதி பாலத்தில் மெகா பள்ளம்
விபத்து அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
ஏரல், ஆக. 11:
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 2 இடங்களில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் பாலம் உடைந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத் தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. இப்பகுதியை தென்கரையோர பகுதி ஊர்மக்களுடன் இணைப்பது ஏரல் ஆற்றுப்பாலம் ஆகும். இந்த ஆற்றுப்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மழைக்காலத்தில் இந்த பாலம் தண்ணீரில் மூழ்குவதால் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கபட்டு வந்தது. இதனால் ஏரலில் வியாபாரம் பாதிப்ப தோடு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏரல் பகுதிக்கு வரமுடியா மல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இதன் அருகிலேயே ரூ.16 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கபட்டது. ஆனால் இணைப்பு சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால் பாலப்பணி ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் பழைய பாலத் தின் ஓரத்தில் பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் பாலம் எந்நேரத்திலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டது. எனவே போக்குவரத்திற்கு முக்கிய பாலமாக இருக்கும் இந்த பாலத்தை உடன் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் இவ்வழியாக சென்று வந்தாலும் உடைந்த இடத்தை சீரமைப்புக்கான எந்தவித வேலையும் நடைபெறவில்லை. இந்நிலையில் உடைந்த பாலத்தின் அருகிலேயே நடுப்பாலத்தில் இன்னொரு பெரிய பள்ளம் விழுந்துள்ளது. அதிகாரிகள் இதனையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பாலம் முற்றிலும் அந்த இடத்தில் உடைந்து ஏரல்&குரும்பூர் நேரடி போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைந்த பாலத்தின் ஓட்டையில் யாரும் விழுந்துவிடக்கூடாது என கல்லை தூக்கி பொதுமக்கள் வைத்துள்ளனர்.
பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பைக் மற்றும் வாகனத்தில் வருபவர்கள் இந்த கல்லில் மோதியும், பாலத்தின் ஓட்டையில் விழுந்தும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். புதிய பாலத்தின் வேலையும் நடைபெறாத நிலையில் பழைய பாலமும் உடைந் தால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரல் பகுதி வியாபாரி கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இரண்டு இடங்களில் பெரிய பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உள்படம்: அபாயகரமான பள்ளம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தில் இணைப்பு சாலை அமைத்து, விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரூ.16¼ கோடி செலவில் உயர்மட்ட பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக ஏரல் உள்ளது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, தரைமட்ட தாம்போதி பாலத்தை மூழ்கடித்து செல்லும். இதனால் ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத், தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், குரங்கணி செல்லும் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே கடந்த 2011– 2012–ம் ஆண்டு நபார்டு ஆர்.ஐ.டி.பி.எப். திட்டத்தின் கீழ், ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலத்தின் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இணைப்பு சாலைஅமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். கடந்த 28–6–2012 முதல் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றின் நடுவில் 20 தூண்களை அமைத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதற்கான நிலம் வனத்துறைக்கு சொந்தமானது ஆகும். இதனால் வனத்துறை அனுமதி பெறுவதற்காக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.
ஓட்டை விழுந்த தாம்போதி பாலம்இதனால் புதிய பாலம் கட்டப்பட்ட நிலையிலும், கடந்த ஒரு ஆண்டாக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் மேல் பகுதியில் உடை மரங்கள் ஆங்காங்கே முளைத்து உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் சில இடங்களில் ஓட்டை விழுந்து உள்ளன. இதனால் அந்த இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே மழைக்காலத்துக்கு முன்பாக புதிதாக கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் வனத்துறை அனுமதி பெற்று, இணைப்பு சாலை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...