பரிகாரம் செய்வதாக கூறி அந்தமானில் கைவரிசை
ரூ.8 லட்சம்
நகை, பணம் சுருட்டல்
ஏரலை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
ஏரல், அக். 30&
ஏரலில் இருந்து அந்தமானுக்கு ஜாதகம் மற்றும் குறி சொல்ல சென்ற 2 பேர் பரிகாரம் செய்வதாகக் கூறி 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை ஏமாற்றி எடுத்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட் டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் மகா கணபதியார்புரத்தை சேர்ந்த அழகிரி மகன் கணேசன். இதே ஊரைச் சேர்ந்த வரதராஜன் மகன் வேல்முருகன் (28). இவர்கள் ஜாதகம் மற்றும் குறி சொல்லி பிழைத்து வந்தனர். ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பல லட்சங்கள் வசூலிப்பது வழக்கம்.
இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கும் சென்று ஜாதகம் மற்றும் குறி சொல்வது வழக்கம். இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு அந்தமான்தீவுக்கு கணேச னும், வேல்முருகனும் சென்றனர்.
தெற்குஅந்தமான் கேப்டவுனில் வசித்து வரும் கண்ணன் மனைவி, அந்தமான் போர்ட்பிளேர் கருப்பசாமி கோயில் தெருவில் வசிக்கும் திருச்செல்வம் மகன் காளி முத்து, தெற்கு அந்தமானில் உள்ள மணிகண் டன் ஆகியோரது வீட்டுக்கு சென்றனர். அவர்களின் ஜாதகம் மற்றும் கைரேகையைப் பார்த்த 2 பேரும் உங்கள் குடும்பத்திற்கு தாலி தோஷம் உள்ளது என்று பயமுறுத்தினர். இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்தனர். பின்னர் அங்கேயே யாகம் செய்த னர். அதன்பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது; தமிழ்நாட்டுக்கு சென்று ஜக்கம்மா கோயிலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர்.
கண்ணன் குடும்பத்தினர் தாலி செயின் உட்பட 10 பவுன் நகையும், காளிமுத்து குடும்பத்தினர் 12 பவுன் தாலி செயின், ஒரு பவுன் டாலர் செயின், 5 கிராம் கல்மோதிரம் மற்றும் பேபி மோதிரங்கள் மூன்று, மணிகண்டன் குடும்பத்தினரி டம் 4 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் என மொத்தம் 30 பவுன் நகை களையும், பூஜைக்காக ரூ.2 லட்சத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகம் திரும்பினர்.
பூஜைகள் முடிந்த பின்னர் நகையை திருப் பித் தருவதாக கணேசனும், வேல்முருகனும் கூறினர். ஆனால் பல மாதங்களா கியும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கண்ணன், காளிமுத்து, மணிகண்டன் ஆகியோர் அந்தமான் பாம்பிளாஸ்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து விசா ரணை நடத்திய சப்& இன்ஸ்பெக்டர் மிசரா, தலைமைக் காவலர் ஹிமா சலம், ஏட்டு மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி எஸ்.பி.,யை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசா ரணை நடத்த உதவுமாறு கூறினர்.
இதையடுத்து அவர் ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் மற்றும் குற்றப்பிரிவு ஏட்டு குமார சாமி மற்றும் போலீசார் சூளைவாய்க்காலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த கணேசன் மற்றும் வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கோர்ட் டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அந்த மான் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட் டில் மனு செய்தனர். மாஜிஸ்திரேட், கணேசன், வேல்முருகன் ஆகி யோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் விசாரணைக் காக அந்தமான் அழைத்துச் சென்றனர்.