கிடப்பில் போடப்பட்ட புதிய ஆற்றுப்பாலப்பணி
ஏரலில் வியாபாரிகள் கடையடைப்பு
ஏரல், நவ. 29:
ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் முக்கிய வணிக நகரமாக விளங்குகிறது. இங்கு வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தம் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த ஏராளமான மக்கள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல் லாம் ஏரல் தாம்போதி பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங் கள் செல்ல முடிவதில்லை.
இதையடுத்து ஏரல் தாம்போதி பாலம் அருகி லேயே ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்ட கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பணி தொடங்கப்பட்டது. 2013 டிசம்பர் மாத இறுதியில் பாலப் பணி முடிவடைந்தது.
ஆனால் பாலத்தில் தென்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். இணைப்புச் சாலை அமைக்க வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் கடந்த ஒரு வருடமாக பாலம் கட்டி முடிக்கப் பட்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தாம்போதி பாலம் தண் ணீரில் மூழ்கியது. மேலும் பாலத்தில் பெரிய அளவில் ஓட்டை விழுந்ததால் ஐந்து நாட்களுக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கிடப்பில் போடப்பட்ட புதிய ஆற்றுப்பால பணி களை உடனே முடிக்க கோரி கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மேலும் இதனை வலியுறுத்தி ஏரலில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடப்பு போராட்டம் நடந்தது.
பெட்டிகடைகள், டீக்கடைகள் உட்பட நகரம் முழுவதும் 750 கடைகள் அடைக்கப்பட்டன. ஏரல் காந்திசிலை அருகே கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வியாபாரிகள் சங்க தலை வர் தசரதபாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் உட்பட பலர் பேசினர்.
வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் தாணுலிங்கம், செயலாளர்கள் தர்மராஜ், மணிவண்ணன், ரவிசங்கர், சிதம்பரம், சீலன், சுனில், ஆலோசகர் அருணாசலம், முஸ்லிம் வணிகர் நல சங்க தலைவர் பாக்கர் அலி, நகை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ் ணன், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், முன்னாள் தலைவர் சாதிக் குல் அமீன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலப் பணிகளை உடனே தொடங்காவிட் டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கடைகள் மூடப்பட்டதால் பஜார் வெறிச்சோடியது.