ஏரல், ஏப். 4: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 3ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். இதையடுத்து ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரல் மெயின்பஜார் மற்றும் பஸ் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன.
கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் நேற்று வழக்கம்போல் மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு, நகராட்சி தினசரி மார்க்கெட், தெற்குபஜார், மாதாங்கோவில்தெரு, புதுரோடு, எட்டயபுரம்ரோடு, ஏ.கே.எஸ்.தியேட்டர்ரோடு, கடலையூர்ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் எப்போதும் போல் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் நேற்று வழக்கம்போல் மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு, நகராட்சி தினசரி மார்க்கெட், தெற்குபஜார், மாதாங்கோவில்தெரு, புதுரோடு, எட்டயபுரம்ரோடு, ஏ.கே.எஸ்.தியேட்டர்ரோடு, கடலையூர்ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் எப்போதும் போல் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக