மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு

4/6/2018 1:59:50 AM
தூத்துக்குடி, ஏப். 6: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் 5ம்தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.
ஏரல்: சாயர்புரத்தில் வியாபாரிகள் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாயர்புரம் மெயின்பஜார் மற்றும் மீன் கடை பஜார் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. பஸ்கள் ஓரளவு ஓடினாலும் அதில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஓட்டப்பிடாரம் :ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலையில் அனைத்து கடைகளும் புதியம்புத்தூரில் சுமார் 80 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆறுமுகநேரி: ஆத்தூர், தெற்கு ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வைகுண்டம்: வைகுண்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன் தலைமையிலான திமுகவினர் துண்டுபிரசுரம் விநியோகித்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
கழுகுமலை:கழுகுமலையில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் போதிய அளவு மக்கள் நடமாட்டம் இல்லாததால் கழுகுமலை பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. நாசரேத்:நாசரேத் பஜாரில் மெடிக்கல்ஸ், ஒரு சில டீக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் தடையில்லாமல் இயங்கின. உடன்குடி:உடன்குடி பஜார் வீதிகள், பேருந்து நிலையம், சத்தியமூர்த்தி பஜார், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டது. சொற்ப அளவிலேயே அரசு, தனியார் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மெயின்ரோடு, தெற்குபஜார், நகராட்சி தினசரி மார்க்கெட், மார்க்கெட் ரோடு, புதுரோடு, கடலையூர்ரோடு, பசுவந்தனைரோடு, புதுக்கிராமம், ரயில் நிலைய ரோடு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மெடிக்கல் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடின. பஸ்கள் இயக்கப்பட்டாலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரம் கடைகள் உள்ளன. நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு, புதிய பஸ்நிலையம் பகுதிகள், போல்பேட்டை, நந்தகோபாலபுரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் தூத்துக்குடியில் பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிறிது நேரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டன.
கோவில்பட்டி, எட்டயபுரம், திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் சிறிதளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 15சதவீத கடைகளும் மாவட்டம் முழுவதும் 20சதவீத கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர். இதற்கிடையே பஸ்கள் வழக்கம் போல இயங்கின. காலையில் சில பஸ்களில் கூட்டமின்றி காணப்பட்டாலும் மாலையில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மினிபஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.
ஏரல்: சாயர்புரத்தில் வியாபாரிகள் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாயர்புரம் மெயின்பஜார் மற்றும் மீன் கடை பஜார் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. பஸ்கள் ஓரளவு ஓடினாலும் அதில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஓட்டப்பிடாரம் :ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலையில் அனைத்து கடைகளும் புதியம்புத்தூரில் சுமார் 80 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆறுமுகநேரி: ஆத்தூர், தெற்கு ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வைகுண்டம்: வைகுண்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன் தலைமையிலான திமுகவினர் துண்டுபிரசுரம் விநியோகித்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
கழுகுமலை:கழுகுமலையில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் போதிய அளவு மக்கள் நடமாட்டம் இல்லாததால் கழுகுமலை பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. நாசரேத்:நாசரேத் பஜாரில் மெடிக்கல்ஸ், ஒரு சில டீக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் தடையில்லாமல் இயங்கின. உடன்குடி:உடன்குடி பஜார் வீதிகள், பேருந்து நிலையம், சத்தியமூர்த்தி பஜார், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டது. சொற்ப அளவிலேயே அரசு, தனியார் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மெயின்ரோடு, தெற்குபஜார், நகராட்சி தினசரி மார்க்கெட், மார்க்கெட் ரோடு, புதுரோடு, கடலையூர்ரோடு, பசுவந்தனைரோடு, புதுக்கிராமம், ரயில் நிலைய ரோடு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மெடிக்கல் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடின. பஸ்கள் இயக்கப்பட்டாலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரம் கடைகள் உள்ளன. நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு, புதிய பஸ்நிலையம் பகுதிகள், போல்பேட்டை, நந்தகோபாலபுரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் தூத்துக்குடியில் பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிறிது நேரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டன.
கோவில்பட்டி, எட்டயபுரம், திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் சிறிதளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 15சதவீத கடைகளும் மாவட்டம் முழுவதும் 20சதவீத கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர். இதற்கிடையே பஸ்கள் வழக்கம் போல இயங்கின. காலையில் சில பஸ்களில் கூட்டமின்றி காணப்பட்டாலும் மாலையில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மினிபஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக