வியாழன், 19 ஏப்ரல், 2018

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை


தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் தொடங்க நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம் 

தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன. அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது.

புதிய விமான சேவை 

இந்த விமான நிலையத்தில் இருந்து தற்போது தூத்துக்குடி–சென்னை இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு தனியார் விமான நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அனைத்து ஆய்வு பணிகளும் நிறைவடைந்து உள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் அந்த தனியார் நிறுவனம் விமானத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் 4 விமானங்கள் இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...