திங்கள், 2 ஏப்ரல், 2018

ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில்





ஏரல், ஏப்.2:  ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாழவல்லான், உமரிக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து ஏரல் மகளிர் பள்ளி மற்றும் இங்குள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் இந்த ரோட்டினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாழவல்லான் மற்றும் உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்தும் வரும் மாணவ, மாணவிகளும் இந்த ரோட்டில் தட்டுதடுமாறி சென்று வருகின்றனர். 

மேலும் இந்த ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்குளும் தட்டுதடுமாறி சென்று வருகின்றனர். மேலும் இந்த ரோட்டின் ஓரத்தில் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களும் இந்த மோசமான ரோட்டில் சிரமப்பட்டு வேலைக்கு சென்று வருகின்றனர். 

இதேபோல் இந்த ரோட்டின் வடபுறம் உள்ள விவசாய நிலத்தில் அதிக அளவு வாழை விவசாயம் நடந்து வருவதால் விவசாயிகளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஏரல்-முக்காணி ரோடு முக்கிய ரோடாக இருப்பதால் இதனை உடனடியாக சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...