ஏரல், : ஏரல் பகுதிகளில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தாமிரபரணி நதியில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது. இவற்றை அகற்றி தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் வறட்சி நிலவுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன. குடிநீருக்கு ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றையே நம்பியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் இருந்து பழைய காயலில் ஆறு கடலில் கலக்கும் வரை உள்ள ஆற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கும் வாழவல்லான் உள்பட பகுதிகளில் இருந்து குடிநீர் வாரியம் மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இந்த உறை கிணறுகளை சுற்றி சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த உடை மரத்தின் வேர்கள் உறை கிணறுகளை துளையிட்டு தண்ணீரை மாசுபடுத்துகிறது.
மேலும், இப்பகுதிகளில் அமலை செடிகளும் அதிகளவில் வளர்ந்து ஆறு முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் ஓடுவதற்கு வழியின்றி, ஆங்காங்கே தேங்கி, சாக்கடையாக மாறி வருகிறது. இந்த தண்ணீர், உறைகிணறுகளில் புகுந்து குடிநீரும் மாசுபடுகிறது.
குறிப்பாக, ஏரல் தாமிரபரணி ஆற்றுக்கு கீழ்புறம் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் ஆக்கிரமித்து நதியை மூடியுள்ளன. இப்பகுதியில் குளிக்கக்கூட முடிவதில்லை. ஒரு சிலர் அமலை செடிகளை அப்புறப்படுத்திவிட்டு குளித்தாலும் அவர்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படுகிறது.
மேலும் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துக்களும் இதற்குள் குடிபுகுந்துள்ளன. தண்ணீரும் சாக்கடை கலரில் கருப்பாக மாறி ஒருவித தூர்நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீரும் வற்றத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செய லாளர் ரவிசங்கர் கூறுகை யில், ‘ஏரல் தாமிரபரணி ஆறு அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் சாக்கடை தண்ணீராக மாறி வருகிறது. மக்களுக்கு நோய்கள் பரவும் முன் இந்த அமலை செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் வறட்சி நிலவுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன. குடிநீருக்கு ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றையே நம்பியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் இருந்து பழைய காயலில் ஆறு கடலில் கலக்கும் வரை உள்ள ஆற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கும் வாழவல்லான் உள்பட பகுதிகளில் இருந்து குடிநீர் வாரியம் மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இந்த உறை கிணறுகளை சுற்றி சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த உடை மரத்தின் வேர்கள் உறை கிணறுகளை துளையிட்டு தண்ணீரை மாசுபடுத்துகிறது.
மேலும், இப்பகுதிகளில் அமலை செடிகளும் அதிகளவில் வளர்ந்து ஆறு முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் ஓடுவதற்கு வழியின்றி, ஆங்காங்கே தேங்கி, சாக்கடையாக மாறி வருகிறது. இந்த தண்ணீர், உறைகிணறுகளில் புகுந்து குடிநீரும் மாசுபடுகிறது.
குறிப்பாக, ஏரல் தாமிரபரணி ஆற்றுக்கு கீழ்புறம் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் ஆக்கிரமித்து நதியை மூடியுள்ளன. இப்பகுதியில் குளிக்கக்கூட முடிவதில்லை. ஒரு சிலர் அமலை செடிகளை அப்புறப்படுத்திவிட்டு குளித்தாலும் அவர்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படுகிறது.
மேலும் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துக்களும் இதற்குள் குடிபுகுந்துள்ளன. தண்ணீரும் சாக்கடை கலரில் கருப்பாக மாறி ஒருவித தூர்நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீரும் வற்றத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செய லாளர் ரவிசங்கர் கூறுகை யில், ‘ஏரல் தாமிரபரணி ஆறு அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் சாக்கடை தண்ணீராக மாறி வருகிறது. மக்களுக்கு நோய்கள் பரவும் முன் இந்த அமலை செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக