ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் கடற்கரையில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
காயல்பட்டினம் கடற்கரையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம், அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது. ஜூம்மா பள்ளி இமாம் நைனா முகம்மது தொழுகையை நடத்தினார். ஜூம்மா பள்ளி கத்தீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பேருரை நிகழ்த்தினார்.
தொழுகை
ஜூம்மா பள்ளி தலைவர் அபுல் ஹசன் கலாமி, செயலாளர் ஏ.எஸ்.சி.நவாஸ், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத் தலைவர்கள் இப்னு சவூது, மொகமது அபுபக்கர், அமானுல்லா ஹாஜி, துணைச் செயலாளர்கள் புஹாரி லெப்பை தம்பி, துணை பொருளாளர் ஹசன், முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் அப்துல் வாஹீத்,
த.மு.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷீத், வர்த்தக அணி செயலாளர் ரபீக், நகர தலைவர் ஜாகீர் உசைன், செயலாளர் பிர்தோஷ், அன்னை கதீஜா மதரசா நிர்வாகி செய்யது முகம்மது உள்பட திரளானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக