ஏரல், அக்.18: ஏரலில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயிலில் முட்டளவுக்கு மேல் மழைநீர் சாக்கடை தண்ணீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ஏரல் பஸ் நிலையம் அருகில் பஜார் நுழைவு வாயிலிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தேக்குமரம் ரோட்டில் சரிந்து விழுந்ததால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் சாயர்புரம் செல்லும் பஸ்கள் மாற்றிவிடப்பட்டன. ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி நடவடிக்கை எடுத்து ரோட்டில் விழுந்த தேக்குமரத்தை வெட்டி அப்புறபடுத்தியதால் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக போக்குவரத்து தொடங்கியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக