சனி, 10 டிசம்பர், 2011

பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி சிக்கினார்


ஏரல், டிச.10&
ஏரல் பகுதியில் கடந்த 2 ஆண்டாக பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி போலீசில் சிக்கினார்.
ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் பலருக்கு கடந்த 2 ஆண்டாக செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என கருதி போலீசில் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் தொல்லை தாங்கமுடியாத சிலர் போலீஸ் உதவியை நாடினர்.
போலீசாரும் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவரின் நம்பரை நோட்செய்து விசாரித்தனர். இதில் செல்போனில் பேசியவர் ஏரல் டவர் எல்கையில் இருந்துதான் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஏரல் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்த சண்முகவேலு மகன் மாரியப்பன்(37) என்பவரை கைது செய்தனர். தச்சு தொழிலாளியான அவர், பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதும் இதற்காக பல செல்போன் நம்பர்களை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
ஏரல் பகுதியில் 2 ஆண்டாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...