சனி, 10 டிசம்பர், 2011

லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி ஏரல்


லாரியில் மரத்தடி இறக்கிய
தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
ஏரல் அருகே
ஏரல், டிச. 10&
ஏரல் அருகே லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். இதையொட்டி உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டனர்.
ஏரல் நாடார் 2வது தெருவைச் சேர்ந்த சிவதாணுலிங்கம் மகன் சேகர்(43). இவர் ஏரல் போலீஸ்நிலையம் அருகே மரக்கடை வைத்துள்ளார். இவருக்கு வாழவல்லான் ரோட்டில் மரம் அறுக்கும் ஷாமில்லும் உள்ளது.
நேற்றிரவு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து லாரியில் வந்த மரத்தடிகளை ஷாமில்லில் இறக்கும் பணி நடந்தது. இதில் தொழிலாளர்கள் நளராஜபுரம் வேதக்கோயில் தெரு ராசாண்டமுத்து மகன் நகுலராஜா(25), நடராஜபுரம் பால்ராஜ் மகன் பாலாஜி, கொத்தலரிவிளை சவுரிமுத்து மகன் மார்ட்டின், திருவழுதிநாடார்விளை அய்யாக்குட்டி மகன் அருள்ராஜ் ஆகியோர் கிரேன் மூலம் இறக்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அந்த வழியாக சென்ற மின் வயரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. தொழிலாளர்கள் ஷாக்அடித்து தூக்கி வீசப்பட்டனர். இதில் நகுலராஜா மட்டும் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி, சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் ஆகியோர் விசாரணை நடத்தி மரக்கடை அதிபர் சேகர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் ஜெயமுருகேஷ்(32) ஆகியோரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...