ஏரல்:ஏரல் மகாத்மாகாந்தி பஸ் ஸ்டாண்டில் கடந்த 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் கரண்ட் பில் கட்டியதில் மட்டும் பஞ்.,திற்கு 15 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தற்போது ஆக்கிரமிப்பை அகற்றி பஸ்ஸ்டாண்டை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சேர்மன் இதற்காக அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கும் ஏரலில் அடிப்படை வசதிகள் குறித்து பல முறை தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏரல் பஸ்ஸ்டாண்டை குறித்து பல முறை செய்திகள் வெளியிட்டும் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தற்போது ஏரல் பஸ்ஸ்டாண்ட் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஏரல் பஸ்ஸ்டாண்ட் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அனுப்பியுள்ள செய்தியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏற்றம் பெற்ற ஊரான ஏரலில் கடந்த 1965ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1969ம் ஆண்டு பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கண்டது. அப்போது ராமசாமி என்பவர் ஏரல் பஞ்சாயத்து சேர்மனாக இருந்தார். ஆரம்ப காலத்தில் பெரிய இடத்தை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலையிலும் இல்லாத அளவிற்கு ஏரல் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பாளர்களால் சீரழிந்து விட்டது. ஏராளமான கடைகளின் ஆக்கிரமிப்பு, கார், வேன் ஆக்கிரமிப்பு, இடம் ஆக்கிரமிப்பு என மிகவும் கேவலமான நிலையில் பஸ்ஸ்டாண்ட் காணப்படுகிறது.
ஏரல் பஸ்ஸ்டாண்டில் முன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த வானொலி நிலையம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு மிகவும் அதிகரித்ததோடு மட்டும் இல்லாமல் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இதுவரை பஞ்.,திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏரல் பஸ்ஸ்டாண்டில் பஞ்சாயத்து சார்பில் 4 முதல் 6 டியூப்லைட் வரைதான் அனுமதிக்கப்பட்டது. அதற்கான மின்கட்டணம் ரூ.1500 முதல் 1800 வரை வர வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வரை பஞ்சாயத்து மின் கட்டணம் கட்டியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னால் 25 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த மின்சாரத்தை யார் பயன்படுத்தியது, இது வரை இருந்த சேர்மன், நிர்வாக அதிகாரி, நிர்வாகம் இதை ஏன்? கண்டு கொள்ளவில்லை. இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத பஸ்ஸ்டாண்டில் பயணிகள் உட்கார கூட இடம் கிடையாது. பஸ்கள் நிற்க வேண்டிய இடத்தில் வாடகை கார்கள் நிற்கிறது. இலவச கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் ரோட்டை விட்டு சுமார் இரண்டு அடி பள்ளத்தில் இருக்கும் பஸ்ஸ்டாண்டில் மழை பெய்தால் தண்ணீர் குளம் போல தேங்கி மக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மோசமாக காணப்படும். மேலும் பஞ்.,திற்கு பஸ்கள் மூலம் எந்த வருமானமும் கிடையாது. ஏரல் பஸ்ஸ்டாண்டில் தினமும் 45 பெரிய பஸ்கள், 10 மினிபஸ்கள் வந்து செல்கிறது. ஒரு பஸ்சிற்கு தினமும் 7 முதல் 8 ரூபாய் வரை வசூல் செய்யலாம். ஆனால் எந்த அடிப்படை வசதியும் பஸ்ஸ்டாண்டில் இல்லாததால் பஸ் டிரைவர்கள் பஞ்.,திற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் திருவிழா மற்றும் ஏரலை சுற்றியுள்ள குரங்கனி அம்மன் கோயில் , சேர்மன் கோயில், ஆறுமுகமங்கலம் கோயில், நாலுமாவடி ஆலயம் இவைகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்போது அந்த பஸ்களின் வருமானமும், பஞ்.,திற்கு இழப்பாகி வருகிறது.
இப்படி பல்வேறு முறைகேடுகள், ஆக்கிரமிப்பு, சீரழிவில் கடந்த 13 ஆண்டுகளாக சிக்கியுள்ள ஏரல் பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற தற்போதைய சேர்மன் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பஸ்ஸ்டாண்ட் குறித்து அனைத்து தகவல்கள் விவரங்களையும் சேகரித்து தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பஸ்ஸ்டாண்டை நவீனப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே பஸ்ஸ்டாண்டில் முறைகேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பை அகற்றி பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற வேண்டும் என்று ஏரல் பொதுமக்கள், பஜார் வியாபாரிகள் அனைவரும் கோரிக்கை விடுத்து கையெழுத்திட்டு மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பினர். ஆனால் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் பொதுமக்களின் கோரிக்கைக்கு கலெக்டரின் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பஞ்.,ல் அவசர கூட்டம் கூட்டப்பட்டு பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் மேலும் பஸ்ஸ்டாண்டில் டூவிலர், டாக்ஸி வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த மார்ச் மாதம் பஞ்.,மூலம் பஸ்ஸ்டாண்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை காணாமல் போய்விட்டது.
இது குறித்து ஏரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனவே கடந்த 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாலும், பஸ்ஸ்டாண்டை காப்பாற்றவும், பஞ்.,திற்கு வருமானத்தை பெருக்கவும், ஏரல் பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பை அகற்றி முறைகேடுகளை தடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள் நலன்காக்கவும், மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் விருப்பமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கும் ஏரலில் அடிப்படை வசதிகள் குறித்து பல முறை தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏரல் பஸ்ஸ்டாண்டை குறித்து பல முறை செய்திகள் வெளியிட்டும் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. தற்போது ஏரல் பஸ்ஸ்டாண்ட் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஏரல் பஸ்ஸ்டாண்ட் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அனுப்பியுள்ள செய்தியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏற்றம் பெற்ற ஊரான ஏரலில் கடந்த 1965ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1969ம் ஆண்டு பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கண்டது. அப்போது ராமசாமி என்பவர் ஏரல் பஞ்சாயத்து சேர்மனாக இருந்தார். ஆரம்ப காலத்தில் பெரிய இடத்தை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலையிலும் இல்லாத அளவிற்கு ஏரல் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பாளர்களால் சீரழிந்து விட்டது. ஏராளமான கடைகளின் ஆக்கிரமிப்பு, கார், வேன் ஆக்கிரமிப்பு, இடம் ஆக்கிரமிப்பு என மிகவும் கேவலமான நிலையில் பஸ்ஸ்டாண்ட் காணப்படுகிறது.
ஏரல் பஸ்ஸ்டாண்டில் முன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த வானொலி நிலையம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு மிகவும் அதிகரித்ததோடு மட்டும் இல்லாமல் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இதுவரை பஞ்.,திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏரல் பஸ்ஸ்டாண்டில் பஞ்சாயத்து சார்பில் 4 முதல் 6 டியூப்லைட் வரைதான் அனுமதிக்கப்பட்டது. அதற்கான மின்கட்டணம் ரூ.1500 முதல் 1800 வரை வர வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வரை பஞ்சாயத்து மின் கட்டணம் கட்டியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னால் 25 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த மின்சாரத்தை யார் பயன்படுத்தியது, இது வரை இருந்த சேர்மன், நிர்வாக அதிகாரி, நிர்வாகம் இதை ஏன்? கண்டு கொள்ளவில்லை. இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத பஸ்ஸ்டாண்டில் பயணிகள் உட்கார கூட இடம் கிடையாது. பஸ்கள் நிற்க வேண்டிய இடத்தில் வாடகை கார்கள் நிற்கிறது. இலவச கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் ரோட்டை விட்டு சுமார் இரண்டு அடி பள்ளத்தில் இருக்கும் பஸ்ஸ்டாண்டில் மழை பெய்தால் தண்ணீர் குளம் போல தேங்கி மக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மோசமாக காணப்படும். மேலும் பஞ்.,திற்கு பஸ்கள் மூலம் எந்த வருமானமும் கிடையாது. ஏரல் பஸ்ஸ்டாண்டில் தினமும் 45 பெரிய பஸ்கள், 10 மினிபஸ்கள் வந்து செல்கிறது. ஒரு பஸ்சிற்கு தினமும் 7 முதல் 8 ரூபாய் வரை வசூல் செய்யலாம். ஆனால் எந்த அடிப்படை வசதியும் பஸ்ஸ்டாண்டில் இல்லாததால் பஸ் டிரைவர்கள் பஞ்.,திற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் திருவிழா மற்றும் ஏரலை சுற்றியுள்ள குரங்கனி அம்மன் கோயில் , சேர்மன் கோயில், ஆறுமுகமங்கலம் கோயில், நாலுமாவடி ஆலயம் இவைகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்போது அந்த பஸ்களின் வருமானமும், பஞ்.,திற்கு இழப்பாகி வருகிறது.
இப்படி பல்வேறு முறைகேடுகள், ஆக்கிரமிப்பு, சீரழிவில் கடந்த 13 ஆண்டுகளாக சிக்கியுள்ள ஏரல் பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற தற்போதைய சேர்மன் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பஸ்ஸ்டாண்ட் குறித்து அனைத்து தகவல்கள் விவரங்களையும் சேகரித்து தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பஸ்ஸ்டாண்டை நவீனப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே பஸ்ஸ்டாண்டில் முறைகேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பை அகற்றி பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற வேண்டும் என்று ஏரல் பொதுமக்கள், பஜார் வியாபாரிகள் அனைவரும் கோரிக்கை விடுத்து கையெழுத்திட்டு மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பினர். ஆனால் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் பொதுமக்களின் கோரிக்கைக்கு கலெக்டரின் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பஞ்.,ல் அவசர கூட்டம் கூட்டப்பட்டு பஸ்ஸ்டாண்டை காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் மேலும் பஸ்ஸ்டாண்டில் டூவிலர், டாக்ஸி வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த மார்ச் மாதம் பஞ்.,மூலம் பஸ்ஸ்டாண்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை காணாமல் போய்விட்டது.
இது குறித்து ஏரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனவே கடந்த 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாலும், பஸ்ஸ்டாண்டை காப்பாற்றவும், பஞ்.,திற்கு வருமானத்தை பெருக்கவும், ஏரல் பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பை அகற்றி முறைகேடுகளை தடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள் நலன்காக்கவும், மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் விருப்பமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக