ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஏரலில் பரிதாபம்: பாய்லரில் சிக்கி வாலிபர் சாவு


அம்பை புதுக்குடியை சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 25). இவர் ஏரலில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முருகேசன் மற்றும் ஆலங்குளம் மருதம்புத்தூரை சேர்ந்த ஜீவா (21)ஆகியோர் பாய்லரை நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு வேலை பார்த்து வரும் ஆத்தூரை சேர்ந்த விஜயகோபால், ஜெயபிரகாஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பாய்லருக்கான சுவீட்ச்சை ஆன் செய்தனராம். இதில் முருகேசன், ஜீவா ஆகியோர் பாய்லரில் சிக்கி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விஜயகோபால்,ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...