ஏரல் & திருவழுதிநாடார்விளை மெயின்ரோட்டில் ரோட்டை விட்டு இறங்கி மணலில் சிக்கிய அரசு பேரூந்து.
ஏரல்&திருவழுதிநாடார்விளை சாலையில்
தடுப்பு சுவரின்றி விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ஏரல், மே 3:
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை சாலையோரத்தில் தடுப்பு தடுப்பு சுவர் அமைக்காததினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று ஏற்பட்ட பஸ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன் விரிவாக்கப்பட்டது. அப்போது சாலையோர பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் நடந்தன. எனவே இதனை தடுக்க பள்ளமான இடங்களில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. ஆனால் மிகவும் பள்ளமாக இருந்த இடங்களிலும் தடுப்பு சுவர் அமைக்காமல் லாரிகளில் மூலம் மண் மட்டும் தட்டி சென்றனர்.
கடந்த மாதம் வாழைத்தார் ஏற்றி கொண்டு வந்த லாரி ரோட்டை விட்டு இறங்கிய போது இந்த பள்ளத்தில் தட்டப்பட்டுள்ள மணலில் சிக்கி கவிழந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் லோடு மேன்கள் உயிர் தப்பினர். இந்நிலையில் நேற்று காலை ஆத்தூரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு சென்ற அரசு பஸ் இதே ரோட்டில் வந்ததது. அப்போது தோல்கடை அருகில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது மணலில் பதிந்து பஸ் கவிழும் நிலை ஏற்பட்டது.
ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் கவிழாமல் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை பார்வையிட்டு மிக பள்ளமாக உள்ள இடங்களில் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக