ஏரல் அருகே
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி&மீனாட்சிபட்டி சாலை
ஏரல், மே 3:
ஏரல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி&மீனாட்சி பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோச மான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பெருங்குளம், பண்டாரவிளை, பண்ணை விளை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம் மற்றும் சாயர்புரம் பகுதி மக்கள் நெல்லைக்கு வாகனத்தில் சென்று வரவேண்டும் என் றால் நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி சாலையில் அணியாபரநல்லூர் வழியாக தெய்வசெயல்புரம் சென்று அங்கிருந்து நெல்லை மற்றும் புளியம் பட்டி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பாதை தூரம் மிக குறைவாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில், ராஜபாளையம், கடம்பூர் மற்றும் மணியாச்சி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்கு தெய்வசெயல்புரம், மீனாட்சிபட்டி, நட்டாத்தி மற்றும் ஏரல் வழி இந்த பாதையை பயன் படுத்தி வருகின்றனர்.
மீனாட்சிபட்டியில் உள்ள தொழிற்சாலைகள், பொறியியல் கல்லூரிக்கும் இவ்வழியாக தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இப்படி முக்கிய பாதையாக இருக்கும் நட்டாத்தி&மீனாட்சிபட்டி ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றம் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக