வியாழன், 23 அக்டோபர், 2014
ஏரல் கடைகளில் சீன பட்டாசுகள் பறிமுதல் ஏரல், அக்.21: ஏரல் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி சீன பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்தனர். ஏரல் பஜார், பஸ்நிலை யம் மற்றும் பாளை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் நேற்று சோதனை நடத்தி ஆய்வு செய்தார். இதில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யபடுவதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பட்டாசு விற்பதற்கான அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்தனர். இதில் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் சந்திரன், ஏரல் ஆர்.ஐ பொன்லட்சுமி, கிராம உதவியாளர்கள் முருகானந்தம், ராமசாமி, கருணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஸ்ரீவை குண்டம் தாசில்தார் ராம சாமி கூறுகையில்; �ஏரலில் அனுமியின்றி விற்கப்பட்ட சீன பட்டாசுகள் ஒரு சில கடைகளில் கண்டுபிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப்பட்டன. மேலும் தீ விபத்து பாது காப்பு கருதி ஒவ்வொரு பட்டாசு கடை முன்பும் 5 வாளிகளில் தண்ணீ, மணல் கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்� என்றார். அதிகாரிகள் நடவடிக்கை ஏரல் பட்டாசு கடைகளில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராமசாமி திடீர் சோதனை நடத்தினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக