சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முத்துமாலை அம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இரவில் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது. 25-ந் தேதி இரவில் அம்மனுக்கு மாக்காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் மதியம் அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. இரவில் வில்லிசை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது.
சப்பர பவனி
வாணவேடிக்கை நடைபெற்றது. மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, நகரில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலையில் திருவீதி உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் சிறப்பு பூஜை, இரவில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்
முத்துமாலை அம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இரவில் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது. 25-ந் தேதி இரவில் அம்மனுக்கு மாக்காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் மதியம் அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. இரவில் வில்லிசை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது.
சப்பர பவனி
வாணவேடிக்கை நடைபெற்றது. மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, நகரில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலையில் திருவீதி உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் சிறப்பு பூஜை, இரவில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக