ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் குறைந்தது
ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துவக்கம்
ஏரல், டிச. 14:
ஏரல் ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் குறைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துவங்கியது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததாலும், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஆற்றுப்பாலம் 11ம் தேதி இரவு தண்ணீரில் மூழ்கியதால் ஏரல்&குரும்பூர் இடை யே போக்குவரத்து துண்டிக் கப்பட்டது.
கடந்த 2 நாட் களாக ஏரலிலிருந்து குரும்பூருக்கு போக்குவரத்து அடி யோடு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் பாலத்தின் வழியாக பைக் மற்றும் நடந்து செல்பவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
ஆனால், பாலம் பலவீனமாக இருந்ததால் பஸ் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு பாலத்தை பார்வையிட்டு பாலத்தில் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல், ஜல்லி களை போட்டு போக்குவரத்தை துவக்கி வைத்தனர்.
இதனால் 2 நாள்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் ஏரல் ஆற்றுப்பாலம் வழி யாக பஸ் போக்குவரத்து துவங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக