ல், டிச. 15:
ஏரல் மற்றும் சாயர்புரம் பகுதிகளில் முருங்கையில் ஊடு பயிராக விதைத்த புடலங்காய் காய்த்து குலுங்குகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மற்றும் சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களான சிறுதொண்டநல்லூர், சூளைவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரி விளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிக்குளம், ராமசாமியாபுரம், நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் உட்பட கிராமங்களில் 500 ஏக்கரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நிலத்தை கட்டுக்குத்தகைக்கு எடுத்து முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். முருங்கைச்செடி வளர்ந்து 4 மாதத்தில் காய் பறிக்கலாம். ஆனால், மழைக்காலத்தில் முருங்கை மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து பட்டமரம் போல் ஆகிவிடும். மேலும் நோய் தாக்குதல் அதிகமிருப்பதால் காய்ப்பதும் இல்லை.
இதனால் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் 3 மாதங்கள் எந்தவித வருமானமும் கிடைக்காது. இந்த இடைப்பட்ட காலத்தில் வருமானம் கிடைப்பதற்காக முருங்கை விவசாயிகள் ஊடுபயிராக புடலை விதைத்தனர். முளைத்த புடலை கொடியை முருங்கை மரங்களில் படர விட்டிருந்தனர்.
தற்போது புடலங்காய் நன்கு காய்த்த நிலையில் விவசாயிகள் அவற்றை பறிக்க துவங்கியுள்ளனர். இங்கு பறிக்கப்படும் புடலங்காய் தரம் பிரிக்கப்பட்டு சாக்கு பைகளில் அடைத்து நெல்லை நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து புடலங்காய் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ20 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ.8 ஆக விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, கொற்கை மணலூரைச் சேர்ந்த விவசாயி அழகேசன் கூறுகையில், �தற்போது ரூ.8க்கு புடலங்காய் கொள்முதல் செய்யப்படும் நிலையில் விலை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது. இதனால் எங்களுக்கு பறிப்பு கூலி, உரம், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட செலவுகளுக்கே கட்டுப்படியாவதில்லை.
எனவே, அரசு எங்களுக்கு மானியத்தில் உரம் மற்றும் பயிர்க்கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்� என்றார்.
ஏரல், சாயர்புரம் பகுதிகளில்
புடலங்காய் விளைச்சல் அமோகம்
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
புடலங்காய்கள் பறிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்காக குவிக்கபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக