செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு .. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை

சென்னை: கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. என்றும் நாளை அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.
TN Government announces tomorrow will be a government holiday
இதையடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இன்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். இவரது மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுவையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...