வெள்ளி, 30 நவம்பர், 2018

ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது


ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல், 

ஏரல் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மெடிக்கல் கடை உரிமையாளர் 

ஏரல் அருகே வாழவல்லான் மேலூரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவருடைய மகன் கணேசன் (வயது 39). இவர் ஏரல் பஸ் நிலையத்தில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜபூ (36).

ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (51). இவர் கணேசனின் அக்காளை திருமணம் செய்துள்ளார். மகேசுவரன், கணேசனிடம் தன்னுடைய மனைவிக்குரிய சொத்துகளை பிரித்து தருமாறு கூறி தகராறு செய்து வந்தார்.

கத்திக்குத்து 

நேற்று முன்தினம் மதியம் ராஜபூ தனது மொபட்டில் வாழவல்லான் நான்கு முக்கு பகுதியில் சென்றார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மகேசுவரன், ராஜபூவை வழிமறித்து அவதூறாக பேசி தகராறு செய்தார். அப்போது ஆட்டோ டிரைவரான ஏரல் அருகே சூழைவாய்க்கால் 4–வது தெருவைச் சேர்ந்த பதுருதீன் மகன் ஆசிக் அலி (31) கத்தியால் ராஜபூவை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜபூவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மகுமாரி வழக்குப்பதிவு செய்து, மகேசுவரன், ஆசிக் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மகேசுவரனுக்கு சொந்தமான ஆட்டோவை ஆசிக் அலி ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...