
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தை சேர்ந்தவர் வினோத்(வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தை சேர்ந்தவர் வினோத்(வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் தனது நண்பரை பார்க்க ஏரல் அருகேயுள்ள மேலமங்களகுறிச்சி பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.
இதனிடையே அவரது மோட்டார்சைக்கிள் மட்டும் அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார்சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதனிடையே இன்று காலை அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வினோத் மேலாடைகள் இல்லாமல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது ஆடைகள் அப்பகுதியில் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் வினோத்தை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வினோத்தின் நண்பர் ஏரலில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வினோத் அடிக்கடி வருவாராம்.
அப்போது வினோத்துக்கும் நண்பரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி நண்பருக்கு தெரியவந்தது. அவர் வினோத்தை கண்டித்தார்.
அதன்பிறகும் அவர்களது தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வினோத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவரது மோட்டார்சைக்கிள் மட்டும் அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார்சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதனிடையே இன்று காலை அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வினோத் மேலாடைகள் இல்லாமல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது ஆடைகள் அப்பகுதியில் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் வினோத்தை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வினோத்தின் நண்பர் ஏரலில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வினோத் அடிக்கடி வருவாராம்.
அப்போது வினோத்துக்கும் நண்பரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி நண்பருக்கு தெரியவந்தது. அவர் வினோத்தை கண்டித்தார்.
அதன்பிறகும் அவர்களது தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வினோத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக