ஏரல், மே 3: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் 111வது ஆண்டு குருபூஜை விழா 5ம்தேதி நடக்கிறது. பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்களில் சித்திரை மாத சுவாமியின் குருபூஜை விழா சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் கோயிலில் அரிசி, காய்கனிகள் உட்பட பொருட்களை கோயிலில் காணிக்கையாக செலுத்துவர். அதனை மறுநாள் சமைத்து கோயிலில் அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு சித்திரை மாத அமாவாசை 4ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று பக்தர்கள் கோயிலில் கொடுக்கும் அரிசி, காய்கனிகளை கொண்டு 5ம்தேதி சமைத்து காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு சித்திரை மாத அமாவாசை 4ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று பக்தர்கள் கோயிலில் கொடுக்கும் அரிசி, காய்கனிகளை கொண்டு 5ம்தேதி சமைத்து காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக