வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நேற்று போக்குவரத்து துவங்கியது. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்பில் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தது
ஏரல் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
ஏரல், நவ. 30:
வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 27ம் தேதி ஏரல் ஆற்றுப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. இதற்கிடையே பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி அமலைச்செடிகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதை பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அகற்றினர்.
பாலத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் ஆசிஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில் பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமலை செடிகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் பாலத்தின் மீது ஓடிய வெள்ளம் வடிந்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு நேற்று பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கியது.
வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் ஆரம்ப பகுதியில் குகை போல் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. அதன்மீது முள்செடியை வெட்டி போட்டு தற்காலிகமாக அடைத்துள்ளதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மீண்டும் வெள்ளம் வந்தால் பாலம் இடிந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக