சனி, 23 பிப்ரவரி, 2013

ஏரலில் குண்டும் குழியுமான சாலை


ஏரல், பிப்.23:
ஏரலில் குண்டும், குழியுமாக உள்ள மெயின் சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. தொழில் சம்மந்தமாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி ஏரல் வந்து செல்கின்றனர். மேலும் ஏரலில் புகழ்பெற்ற சேர்மன் அருணாசல சுவாமி கோயில், அருகே ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசுவாமி கோயில், குரங் கணி முத்துமாலையம்மன் கோயில் இருப்பதால் ஏரல் வழியாக பக்தர்கள் அதிக அளவு சென்றுவருகின்றனர். இதனால் ஏரலில் எப் பொதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இங்கு உள்ள முக்கிய சாலையான ஏரல் சினிமா தியேட்டர் அருகே இருந்து பஸ்நிலையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தார்ரோடு அமைக்க வேண் டும் என ஏரல் நகர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரமைக்க வலியுறுத்தல்
ஏரல் சினிமா தியேட்டரிலிருந்து பஸ்நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...