புதன், 20 நவம்பர், 2013

மழையால் ஏரல்-குரங்கணி ரோடு சேதம்

ஆழ்வார்திருநகரி: ரலில் இருந்து குரங்கணி வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் சாலை மழையால் அரிக்கப்பட்டு அச்சப்படும் வகையில் உள்ளது.ஏரலில் இருந்து குரங்கணி, வழியாக திருநெல்வேலி மற்றும் நாசரேத் செல்லும் சாலை அதிகமாக போக்குவரத்து மிகுந்தது. இந்த சாலை ஆற்றங்கரை வழியாக குரங்கணி வரை இருபுறமும் மழையால் அரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தார்ரோடானது மேலே கவசம் போல் உள்ளது. இதன் மேல் வாகனம் சென்றால் இடிந்து விழும் அபாயமாக உள்ளது. இது கார்த்திகை மாதம் என்பதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் இந்த பாதையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த ரோடுகளில் செல்ல முடியாது. அதனால் பொதுமக்கள் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் மேல் குண்டுகற்களை வைத்து எச்சரிக்கை படுத்தி உள்ளனர். இது நெடுஞ்சாலை துறையினரால் சரி செய்யப்படுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...