புதன், 20 நவம்பர், 2013

ஏரல் - குரும்பூர் ரோடு மீண்டும் சேதம் பொதுமக்கள் அதிருப்தி

ஏரல்: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பின் சீரமைக்கப்பட்ட ஏரல்-குரும்பூர் ரோடு சில வாரங்களிலே மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஏரலில் இருந்து குரும்பூர் வரை செல்லும் ரோடு முக்கியமான ரோடாகும். தினமும் இவ்வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ரோடு குறித்து பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கோடை காலம், வறண்ட வானிலை உள்ள காலத்தையெல்லாம் விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் இந்த ரோட்டின் பணிகள் தொடங்கப்பட்டன. சரியான முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அவசரம் அவசரமாக தரமற்ற முறையில் இந்த ரோடு வேலை நடந்து வந்தது. பணிகள் இன்றும் முடியாத நிலையில் புதிதாக தார் ரோடு போட்ட இடங்களில் சில வாரங்களிலேயே தார்
ரோடு பெயர்ந்துவிட்டது. மேலும்
வேலையும் பாதியிலே நிற்பதால் ஓரங்களில் கற்கள் பெயர்ந்து டூவீலர்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக மோசமான நிலையில் கிடந்த ரோட்டை எவ்வளவு தரமான ரோடாக சீரமைக்க வேண்டும் என்பதை விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் அவசர கோலத்தில் ரோட்டை சீரழித்தது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மழை காலம் தொடங்கிய பின்பு ஏன் இந்த ரோட்டின் வேலையை தொடங்கினர் என்பது தான் கேள்வியாக உள்ளது. இது பொதுமக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை எடுத்து ஏரல்-குரும்பூர் ரோட்டை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...