ஏரலில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.
ஏரலில் கல்வி
உதவி தொகை வழங்கல்
ஏரல், டிச.1:
ஏரல் மகாசேமம் அறக்கட்டளையும், எல்.ஐ.சி நிறுவனமும் இணைந்து ஆம் ஆத்மி பீமா யோசானா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஏரல் கிளை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மகாசேமம் வட்டார மேலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஏரல் கிளை மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் 52 குழந்தைகளுக்கு ரூ31 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை களவர்ச்சி பணியாளர்கள் இசைராமன், பாலகுரு, சுடலைமுத்து, பரமசிவன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக