T
ஆத்தூர்,
ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2 கற்சிலைகள்
ஆத்தூர்- முக்காணி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் வழியாக நேற்று காலையில் பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பழைய பாலத்தின் அடியில் தாமிரபரணி ஆற்றில் 2 கற்சிலைகள் கிடந்தது தெரிய வந்தது.
ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலர் ஆற்றுக்குள் இறங்கி 2 சிலைகளையும் வெளியே எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானவர்கள் அந்த சிலைகளை பார்த்து சென்றனர். அந்த 2 சிலைகளும் கல்லால் செய்யப்பட்டவை. அவைகள் கருப்பசாமி மற்றும் லட்சுமி நாராயணர் சிலைகள் என்பது தெரிய வந்தது.
கடத்தல் சிலைகளா?
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாமி சிலைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு வரையிலும் அந்த சிலைகள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த சிலைகளை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
யாரேனும் கோவிலில் பழங்கால சிலைகளை கடத்தி வந்து போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? அல்லது உடைந்த சிலைகளை ஆற்றில் வீசிச் சென்றனரா? என ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2 கற்சிலைகள்
ஆத்தூர்- முக்காணி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் வழியாக நேற்று காலையில் பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பழைய பாலத்தின் அடியில் தாமிரபரணி ஆற்றில் 2 கற்சிலைகள் கிடந்தது தெரிய வந்தது.
ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலர் ஆற்றுக்குள் இறங்கி 2 சிலைகளையும் வெளியே எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானவர்கள் அந்த சிலைகளை பார்த்து சென்றனர். அந்த 2 சிலைகளும் கல்லால் செய்யப்பட்டவை. அவைகள் கருப்பசாமி மற்றும் லட்சுமி நாராயணர் சிலைகள் என்பது தெரிய வந்தது.
கடத்தல் சிலைகளா?
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாமி சிலைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு வரையிலும் அந்த சிலைகள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த சிலைகளை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
யாரேனும் கோவிலில் பழங்கால சிலைகளை கடத்தி வந்து போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? அல்லது உடைந்த சிலைகளை ஆற்றில் வீசிச் சென்றனரா? என ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக