வியாழன், 8 பிப்ரவரி, 2018

ஏரல் அருகே இரு பிரிவினரிடையே மோதல்





ஏரல், பிப். 9: ஏரல் அருகே சிவகளைகுளத்தில் நேற்று மாலை இரு பிரிவை சேர்ந்த வாலிபர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனையறித்த சிவகளை ஊர் இருபிரிவை சேர்ந்த பெரியவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து வைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், இமானுவேல், ஜெயசேகரன், சுந்தரராஜன் மற்றும் 50 மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...