புதன், 14 பிப்ரவரி, 2018

அகரம்- ஏரல் சாலை முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த



ஏரல், பிப். 15: முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த அகரம்- ஏரல் சாலையால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.பழையகாயல் அருகே அகரம் பாலத்தில் இருந்து அகரம் ஊர் வழியாக மாரமங்கலம், கொற்கை, வாழவல்லான் வழியாக ஏரலுக்கு செல்லும் சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர், சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியது. இதில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளங்கள் உருவாகின. இதனால் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. 

இந்த சாலை வழியாக அகரம், மாரமங்கலம், கொற்கை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாழவல்லான், உமரிக்காடு, ஏரல் பள்ளிகளுக்கு சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும், வாழை விவசாயிகள் உள்ளிட்டோரும் இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, இந்த சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...