திங்கள், 23 செப்டம்பர், 2019

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
ஏரல், 

ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் புதுப்பித்து கட்டப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து ஏரலில் உள்ள ஒரு மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டுறவு துறை சார்பில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு கடன்களை வழங்கினார். பின்னர் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 134 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., ஏரல் தாசில்தார் அற்புதமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் இந்துமதி, துணை பதிவாளர் ரவீந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...