குரங்கணி
பஞ்., தலைவியிடம் 11 பவுன்
நகை பறித்த 2 பேர் கைது
ஏரல், ஏப். 20&
குரங்கணி பஞ்சாயத்து தலைவியிடம் 11 பவுன் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணியைச்சேர்ந்த ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி(45) பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இவர் அம்மன்கோயில் ரோட்டில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜூ, குற்றப்பிரிவு எஸ்.ஐ. நாராயணன், ஏட்டுக்கள் குமாரசாமி, மாடசாமி மற்றும் போலீசார் தென்திருப்பேரை ஆத்தூரான் கால்வாய் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, குரங்கணி பஞ்சாயத்து தலைவியிடம் நகை பறித்தது அவர்கள்தான் என தெரியவந்தது. இதையொட்டி ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு அம்மன்கோயில் தெரு சின்னக்கண் மகன் ஜெகன்(36), செய்துங்கநல்லூர் சண்முகம் மகன் ஆறுமுகம்(31) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மீட்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக