வியாழன், 5 ஏப்ரல், 2012

ஏரல் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

ஏரல்: ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.3850 அபராதம் விதிக்கப்பட்டது.
ஏரல்  பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.  பேரூராட்சி நிர்வாக அதிகாரி தனசிங் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், சுகா தார மேற்பார்வையாளர் எட்வர்டு ஜெபசீலன், அடைக்கலம், அலுவலக பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் காவல் துறையினருடன் ஏரல் பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். 
இதில் ஏரல் பஸ் நிலையம், பாரதியார் ரோடு, பள்ளிவாசல்  தெரு மற்றும் காந்திசிலை அருகில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 124 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3850 அபராதம் விதிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து விற்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஏரல் பகுதியில் இதுவரை 154 கடைகளில் இருந்து  262 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...