வியாழன், 5 ஏப்ரல், 2012

ஏரலில் 4 நாட்கள் நகைக்கடைகள் அடைப்பு

ஏரல்: ஏரலில் இன்று முதல் 4 நாட்கள் கடையடைப்பு நடத்த நகைக்கடை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 
ஏரல் நகை வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஏரலில் இன்று (5ம் தேதி) முதல் 8ம் தேதி வரை 4 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவா, அரிராமகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், சாதிக் அலி, முருகன், செல்வம், கணேசன், சைலப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...