வியாழன், 9 ஏப்ரல், 2015

ஏரல் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை

ஏரல் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை
ஏரல், ஏப். 9:
ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று காலை சுமார் ஒரு நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ரோடு களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரல் மற்றும் புதுமனை, சிறுத்தொண்டநல்லூர், திருவழுதிநாடார்விளை, மங்கலகுறிச்சி, பெருங்குளம், சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி யிலிருந்து 9 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரல் பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் ஸ்டாப், பேரூராட்சி அலுவலகம் பகுதிகளில் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கியது. மேலும் ஏரல் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் சாக்கடை கான் நிறைந்து மழை தண்ணீருடன் சாக்கடை தண்ணீரும் சேர்ந்து அதிக அளவு தேங்கியதால் மாணவிகள் தண்ணீரில் இறங்கி சிரமப்பட்டு பள்ளிக்கு சென்றனர்.
ஏரல் பஸ் நிலையம் அரு கில் உள்ள தார் ரோட்டை விட பஸ் நிலையம் பள்ள மாக இருப்பதால் ரோடு களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் பஸ்நிலையத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பயணிகள் பஸ் ஏறி செல்ல சிரமப்பட்ட னர்.
மேலும் ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து மெயின் பஜார் செல்லும் நுழைவு வாயில் மற்றும் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜாருக்குள் செல்வதற்கான நுழைவு வாயில் ரோடுகளில் தண்ணீர் முட்டளவுக்கு மேல் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஜார் வழியாக உள்ளே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புஞ்சை நிலங்களில் பயிர் செய்துள்ள வாழை, முருங்கை மற்றும் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ஏரலில் நேற்று பெய்த திடீர் மழையினால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...