ஏரல் பகுதிகளில் பெய்த திடீர் மழையில் செங்கல்கள் கரைந்து சேதமடைந்தது.
ஏரல், பகுதியில் திடீர் கனமழை
10 லட்சம் செங்கல் சேதம்
ஏரல், ஏப். 1:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த 5 தினங்களாக ஆங்காங்கே பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏரல் பகுதியில் நேற்று அதி காலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏரல், புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல் லான், உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், கொற்கை, லெட்சுமிபுரம், இரண்டாம்பண்ணை விளை, குரங்கணி, மாவடிப்பண்ணை, தென்திருப் பேரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற் பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் பச்சை செங்கல் கள் மழை தண்ணீரில் கரைந்து சேதமடைந்தது. ஏற்கனவே குறுமண் தட்டுப் பாடு, கூலி உயர்வால் உற் பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த திடீர் மழையினால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில், இந்த திடீர் மழையால் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர், சூழைவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, திருப்பணிச்செட்டிகுளம், வலசக்காரன் விளை, ராமசாமியாபுரம், நட்டாத்தி பகுதிகளில் வாழை, முருங்கை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக